இன்சுலின் தூண்டும் வெள்ளரி
உடலில் சேரும் கெட்ட நீரை பிரித்து எடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய்.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும் போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம்.
வாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி நன்றாக பருக்களில் படுமாறும் மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும்.
வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.
வெள்ளரிக்காய் நீர் சத்துடன் உமிழ்நீரையும் கலந்து சாப்பிட்டால் நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் இருக்காது.
வெள்ளரிக்காய் 96 சதவீதம் நீர்ச்சத்தும் நான்கு சதவீதம் உயர்ந்த புரதச்சத்தையும் கொண்டது.
உடலில் நீர் சத்துக்களை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
நல்ல கொழுப்பு, மாவு சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் வெள்ளரியில் நிறைந்து இருக்கின்றன .
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.
மலச்சிக்கல், இரப்பையல் புண், பித்த கோளாறுகள், ரத்த அழுத்தம் போன்றவற்றை வெள்ளரிக்காய் குறைத்து விடும் .
குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காய் கல்லீரல் உஷ்ணத்தை தணிக்க வல்லது.
கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துக்களை விரைவில் செரிமானம் ஆகி சக்தியாக மாற்றி விடுகிறது.
இன்சுலின் சுரக்கச் செய்யும்
ஹார்மோனை தூண்டும் சக்தியாக வெள்ளரிக்காய் செயல்படுகிறது.
வெள்ளரிக்கையில் நிறைந்திருக்கும் சல்பர்சத்துக்கள் கூந்தலுக்கு பளபளப்பு தருகிறது.
வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்தால் கருவளையங்கள் மறைகிறது.
அழகு ஆரோக்கியம் எல்லாம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டு அழகுக்கு அழகுக் கூட்டலாம்.
மிகுந்த குளிர்ச்சி உடல் நிலையை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.