தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?
தினமும் குளிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்த பலரும் விரும்புவார்கள்.
அதுவும் குளிர் காலத்தில் காலை வேளையில் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால் தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
வெந்நீர் குளியலில் உடலுக்கும், மனதுக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்ட்ஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல் வலி நீங்குவதுடன் சளி ,இருமல் பிரச்சனைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பார்கள் ஆனால் அது உண்மை இல்லை.
வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை கேளுங்கள்:
உண்மையில் வெந்நீர் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன.
உங்கள் சருமம் மென்மையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள்.
வெந்நீரில் குளிக்கும் போது சருமத்தின் வீரியத்தன்மை குறைந்து விடும்.
உங்களுடைய சரும வகை சென்சிட்டிவாக இருந்தால் நிச்சயம் வெந்நீரில் குளிக்க கூடாது .
அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.
தூக்கத்தை கலைக்க பெரிதும் வெந்நீர் குளியல் தான் சிறப்பு என்று நினைப்பது தவறு.
குளிக்கும் போது சுகமாக இருக்கும். ஆனால் நாளடைவில் உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்து விடும்.
தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமை தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும்.
சுடச்சுட தண்ணீரை தலையில் கொட்டி குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலம் இழந்து அதிக அளவில் முடி கொட்டும்.
ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்துவிடும்.
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் சுகமாகத்தான் இருக்கும்.
அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும்.
அதன் பின்வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில் தான் குளிப்பார்கள்.
பழக்கம் காரணமாக இதை செய்வதை தவிர்ப்பதே நல்லது.
குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் என்றால் வெயில் காலத்தில் குளிர்ந்த நீர் குளியல் என மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளும் போது இரண்டு சொம்பு குளிர்ந்த நீரில் முதலில் குளியுங்கள் அதன்பின் அந்த குளிர்ச்சியை உடலுக்கு பழகிவிடும்.
முழு குளிரையும், குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சியாகவும் சருமமும் பொலிவாகும்.
தலைமுடி உதிர்வும் இருக்காது.