முகம் பொலிவு பெற....

மஞ்சள் முகமே வருக

உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு கழுவினால் முகம் அழகாக மாறும்.

 இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மட்டும் கழுத்துப் பகுதிகளில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழிவினால் முகம் பளபளக்கும்.

 நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாறை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

 தயிரை முகத்தில் பூசி ஊற வைத்து பின்பு கழுவினால் முகம் பளபளப்பு ஆகும் .

கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் முகச்சுருக்கங்கள் மறையும்.

 பாலாடையை நன்றாக தேய்த்து ஊற விட்டு முகம் கழுவினால் மென்மையுடன் பிரகாசமாகும்.

 காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி அரைமணி நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்புடன் மிருதுவாகவும் இருக்கும்.

 கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து பின்பு குளித்து வந்தால் முகம் நல்ல நிறமாக மாறும்.

 தக்காளியை இரண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து உலர வைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு ஆகும்.
 வெள்ளரிச்சாறை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று புத்துணர்வுடன் இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை