பற்கள் வலிமை பெற
மிளகுத்தூளுடன் உப்பு சேர்த்து பல் விலக்கி வர சொத்தை பல் வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளி பாலை வீக்கத்தில் தடவி லேசாக தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும், வீக்கமும் போகும்.
பல் வலி உள்ள போது பல் துலக்கிய பின் ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் மீது தேய்க்க பல்லாட்டம், பல் சொத்தை, பல் கரை, பல்லியில் ரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
ஆலமர பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.
ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் இருளில் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.
கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும்.
நந்தியா வட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.
ஓமத்தை நீர் விட்டு அரைத்து களிப்போல் கிளறி இளஞ்சூட்டில் பற்று போடவும்.
ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.
இது போல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம் .
வாகை மரப்பட்டையை எரித்து பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல்வலி குணமாகும்.
கருவேலம் பட்டை பொடியால் பல் துலக்கவும்.
நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க இரு பலமடையும் .
அசோக மர பட்டை பொடியுடன் உப்பு சேர்த்து விலக்கவும்.
கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும்.
வெங்காயச்சாற்றை பஞ்சும் நினைத்து பல் ஈறுகளில் தடவவும்.