இயற்கை தரையில் நடைபயில்வோம்
பூமிக்கும் மனிதனுக்குமான உறவு அறுந்து போவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் செருப்பு காலுடன் இருக்கிறோம்.
வீட்டுக்குள் செயற்கை தரையில் நடைபெறுகிறோம்.
அதனால் பூமி இடமிருந்து மனிதருக்கு கிடைக்கும் இயற்கை ஆற்றல் தடை படுகிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை .
இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது .
அதன்படி பூமியில் வெறும் கால்களுடன் நடக்கும் மனிதருக்கு இயற்கையாக பல்வேறு நன்மை கிடைக்கிறது.
அதாவது பூமி இயற்கையாகவே நெகட்டிவ் சார்ஜ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் கொண்டது.
எனவே வெறும் காலுடன் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறைகளான ஆக்ஸிஜன் நேற்றம் தடுக்கப்படுகிறது.
அதாவது உடலுக்கு நேரடியாக பூமியிலிருந்து வைட்டமின் சி கிடைப்பதால் உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கப்படுகிறது.
இது ஆக்சிஜன் ஏற்றம்,கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
இது தவிர வெறும் கால்களுடன் நடப்பது மூலம் மன அழுத்தம், உடல் வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்களும் தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பூமியுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக பராமரிக்கப்படுகிறது.
இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருப்பதுடன் ரத்தம் தொடர்பான இதய நோய்கள் முற்றிலும் குறைக்கப்படுகிறது.
எனவே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது .
மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களும் , கிராமத்து மக்களும் இதய நோய் பாதிப்புகளில் இருந்து விலகியே இருப்பது ரகசியம் இதுதான்.
ஆகவே நகரவாசிகளும் தினமும் அரை மணி நேரம் ஆவது வெறும் காலுடன் பூமியுடன் தொடர்பில் இருப்போம்.
இப்போது ரோடுகளும் செயற்கையாக மாறிவிட்டது.
ஆகவே பூங்கா, கடற்கரை, தோட்டம் போன்ற பகுதிகளில் தினமும் அரை மணி நேரமாவது நடைபெறுவோம்.
இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியத்தை பெற்றுக் கொள்வோம்.