வாயு ஏற்படுவது ஏன்?

வாயு ஏற்படுவது ஏன்? 

வாயு பிரச்சனை.
 இது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டிய பிரச்சனைதான், என்றாலும் எல்லோரும் அறியவேண்டிய முக்கியமான பிரச்சனை.

 நாகரீக உணவுப் பழக்கம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளையும், எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ? அப்போதே இருந்து பலரையும் வறுத்து எடுக்கும் பிரச்சனையாக இது உருமாறிவிட்டது.

 வாயு தொல்லை எது ?

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அதிக அறிகுறிகள் உடன் காணப்படும்.

 உணவு பாதை பிரச்சினையை அலோபதி மருத்துவம் வாயு தொல்லை என்கிறது.

 ஆனால் பொதுமக்கள் வாயுவுக்கு துணியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி , இடுப்பு வலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வழிகளுக்கும் வாயு தான் காரணம் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.

 நம் உடற்கூறு அமைப்பின்படி சுவாசப் பாதை, உணவுப் பாதை என இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும் .

பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக் கொண்டிருப்பதில்லை .

அப்படி சுற்றினால் அது உயிருக்கே ஆபத்து .
வாயு எப்படி வருகிறது? 

நாம் அவசர அவசரமாக சாப்பிடும்போதும், பேசிக் கொண்டே சாப்பிடும் போதும், காபி, டீ மற்றும் புட்டி பானங்களை உறிஞ்சி குடிக்கும் போது நம்மை அறியாமலேயே காற்றை முழுங்கி விடுகிறோம்.

 இந்த காற்றில் 80% இரப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடுகிறது.

 மீதி குடலுக்கு சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

 அடுத்ததாக குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நாெதித்தல் என்னும் செயல்முறையின் மூலம் பல வேதி மாற்றங்கள் நிகழ்வதால் ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் என பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தி செய்கின்றன.

 சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயு உற்பத்தி ஆகிறது.

 அது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும்.

 எனவே இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.

 சாதாரணமாக நம் குடலில் 200 மில்லி வாயு தான் இருக்கக்கூடும் .

இதை வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் .

விஷயம்  இதுதான். கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால் உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம் .

கெட்டவாடை ஏன்?

 சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது.

 ஆனால் குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாக செரிக்கப்படுவதில்லை.

 அப்போது அமோனியா, ஹைட்ரஜன், சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசன வாய் வழியாக வெளியேறும் .

அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கை பிடிக்கும் நிலை உருவாகிறது .

சத்தம் ஏன் கேட்கிறது? 

பலருக்கு சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது.

 சிலருக்கு சப்தத்துடன் அது வெளியேறுகிறது.

 காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜன் உடன் கலந்தால் புஸ்வானம் சத்தம் மட்டுமே கேட்கும்.

 இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் அணுகுண்டு வெடியை போன்ற சத்தம் கூட கேட்கலாம் .

வாயு அதிகமாக வருவது ஏன்? 

நாள் ஒன்றுக்கு சரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.

 இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ? வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்து கொண்டாலோ? என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும் .

பொதுவாக புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும், ஸ்டார்ச் நிறைந்த கிழக்குகளையும் அதிகமாக சாப்பிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம் .

அடுத்து மலச்சிக்கல், குடல் புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பை, கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

 குடல், காசநோய், புற்றுநோய், குடல் அடைப்பு, குடல் எரிச்சல் போன்றவற்றால் குடலிறக்கம் தடைபடும் போது வாயு அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது வாய்வு தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

 உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும்.

 உடற்பயிற்சி இல்லாதது, உடல் இயக்கம் இல்லாமல் முடங்கி கிடப்பது,  தண்ணீரை சரியாக குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாய்வு தொல்லை அதிகரிக்கிறது.

 என்ன சிகிச்சை?

வாயுவுக்கு காரணம் உணவா? நோயா? என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவது வாயு தொல்லையை நிரந்தரமாக தீர்க்க உதவும் .

வாயு பிரச்சனைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன.

 சீக்கிரத்திலேயே இதை குணப்படுத்தலாம். என்றாலும் இதை வரவிடாமல் தடுக்க சரியான உணவு முறை அவர் முக்கியம் .

வாயுக்கு எதிரிகள் 

மொச்சை, பட்டை பட்டாணி, பருப்பு பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள் .

வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள்.

 அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவை சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாக தோன்றுகிறதோ? அதையும் முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 வாயுவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

எண்ணெய் உள்ள உணவு வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

 ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள்.

 தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.

 நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

 வெற்றிலை, பாக்கு, பான் மசாலா வேண்டாம்.
 மது , புகைப்பழக்கம் ஆகாது.

 இத்தனையும் சரியாக அமைந்தால் வாயு உங்களை தொல்லை செய்யாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை