வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால் அதனை சமைப்பது இல்லை.
எனவே வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்:
வாழைப்பூவை வாரம் ஒரு முறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
இதனால் ரத்தத்தின் பசித்தன்மை குறைந்து ரத்தம் வேகமாக செல்லும் ரத்த நாளங்களில் ஒட்டி உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகத்தை தேவையான இரும்புச்சத்தையும் கொடுப்பதோடு ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் காக்கும் .
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை அதிகம் உதவுகிறது .
இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
மேலும் கணையும் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கிறது .
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புண்கள் ஆறும் .
செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப்பூவிற்கு உண்டு.
மூல நோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலம் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவை பயன்படுத்தலாம்.
வாழைப்பூ மூல கடுப்பு, ரத்தமூலம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வாழைப்பூவிற்கு மலச்சிக்கலை நீக்கும் தன்மை உள்ளது.
சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்தப்போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது வெளிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கண்களில் கண் குறை ஏற்படுவதை தடுக்கிறது .
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.
இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.