பாம்பின் விஷம்
பாம்பின் விஷத்தில் இரண்டு வகை உண்டு .
ஒன்று நியூரோடாக்சின் என்கிற விஷம்.
இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
அரை மணி நேரத்திற்குள் ஆன்ட்டி ஸ்நேக் வினோம் மருந்தை கொடுத்தால் கடிபட்டவரை காப்பாற்றி விடலாம்.
பாம்பின் விஷத்தில் இன்னொரு வகை ஹீமோடாக்ஸின் என்ற விஷம்.
இது மனிதனின் ரத்த சிவப்பு அணுக்களை வேகமாய் அளித்து மரணத்தை உண்டாக்கும்.
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.
சில புத்திசாலிகள் பாம்பு கடித்து இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்வார்கள்.
இது தவிர பாம்பு கடித்து இடத்தை கத்தியால் கீறி ரத்தத்தை வெளியேற்றும் அதி புத்திசாலிகளும் உண்டு.
அதேபோல் பாம்பு கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள் வைக்கும் இன்னசென்ட் டாக்டர்களும் உண்டு.
முக்கியமாக பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் .
தவிர வீட்டில் வைத்துக்கொண்டு கை வைத்தியம் பார்க்கக்கூடாது.
கடிபட்டவர் நடக்கவே கூடாது .
அவரை படுக்க வைத்தோ அல்லது உட்கார வைத்தோதான் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உடம்பில் அசைவுகள் அதிகமாக இருக்கக் கூடாது .
அசைவுகள் அதிகமாக இருந்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி விஷத்தின் பாதிப்பு அதிகமாகும் .
கடித்தது பாம்பு தானா? என்பதை கண்டறிய பாம்பு கடித்து இடத்தில் இரண்டு பற்கள் மட்டுமே பதிந்திருக்கும்.
கடித்த இடத்தில் வீக்கமும் கடுமையான வலியும் இருக்கும் .
இந்த அறிகுறி இருந்தால் மட்டுமே அது விஷப்பாம்பு.
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியது
இரண்டு வேலைகள் தான்:
1. கடிப்பட்ட இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
2.பிறகு மருத்துவமனைக்கு பறக்க வேண்டும்.
விவேகம், அதிவேகம் ஒருங்கிணைத்து செயல்பட்டால் கடிப்பட்டவர்கள் பிழைக்க 90% வாய்ப்பு அதிகம்.