குங்குமப்பூ
எண்ணெய் பாலுடன் குங்கும பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மற்றும் சருமப்பிளிவு கூடும் என்பது உண்மை.
குங்குமம் பூ தைலம் சில சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும் .
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்தில் இருந்து பாலில் குங்கும பூவை கலந்து கொடுத்து வந்தால் சிசுவிற்கும், தாய் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
குங்குமப்பூவில் இருக்கும் பல வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு எதிர்ப்பாக உள்ளதால் புற்றுநோய்க்கான மருந்துகளில் குங்குமப்பூ அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
மன உளைச்சல், மனசோர்வு உள்ளவர்கள் குங்குமப்பூவினை எடுத்துக் கொள்ளும்போது சரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதால் மூலம் மன உளைச்சல் நீங்குகிறது.
வயது முதிர்ச்சியால் வரும் கண் தெரியாமல் பாதிப்பு, குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் குறைகிறது.
கண்களில் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப்பூ உதவுகின்றது .
ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதமாகும்.
நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது.
இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
மூட்டு வலி உடையோருக்கு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு, சதை வீக்கங்கள் குறைகின்றது.
மூட்டு பலவீனம் நீக்குகின்றது.
நல்ல குங்குமப்பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பாக நிறம் மாறினால் அது போலியானது.
10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறி நல்ல மனமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப்பூ என்பதை கண்டறியலாம்.
குங்குமப்பூ எண்ணெய்
இந்த எண்ணெயில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது.
இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கி சரும துளைகளை நீக்குகிறது.