சில்லு மூக்கு உடைஞ்சு போச்சா?
சின்ன பிள்ளைகள் விளையாடும்போது எங்கேயும் மோதி கொண்டால் கீழே விழுந்தால் மூக்கில் லேசாக அடிபட்டாலே ரத்தம் கொட்டுவதை பார்த்து இருப்பீர்கள்.
இன்னும் சிலர் குச்சி, பல்பம் , பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குறைவார்கள்.
இதன் விளைவாக மூக்கில் புண் உண்டாகி ரத்தக் கசிவு ஏற்படும்.
சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும் .
மூக்கில் சளி ஒழுகும்.
அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும்.
அப்போது மூக்கில் இருந்து ரத்தம் வடியும் அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கை பலமாக சிந்துவார்கள்.
இதனாலும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் வரலாம்.
குழந்தைகளுக்கு மூக்கில் நீர் கோப்பு, சதை வளர்வதுண்டு.
தவிர மூக்கும், தொண்டையும் இணைகிற பகுதியில் அண்ணச்சதை வீங்குவதும் உண்டு.
இந்த இரண்டு காரணங்களால் மூக்கு அடைத்துக்கொள்ளும்.
அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு மூக்கிலிருந்து ரத்தம் வடியும்.
இதுபோக படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும், பெரியவர்களுக்கும் கூட மூக்கில் இருந்து ரத்தம் வடியும்.
மூக்குக்கும் மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது.
மிகுந்த வெப்பமும் ஆகாது.
குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றை சுவாசித்தால் மூக்கில் ரத்தம் வடியும்.
கோடையில் மூக்கில் நுட்பகுதிகள் வெப்பத்தால் உணர்ந்து சவ்வுகளில் விரிசல் ஏற்படும்.
இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும்.
ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.
அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களுக்கும், நடுத்தர வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கும் மூக்கில் ரத்தம் வந்தால் இது சாதாரண சில்லு மூக்கு தொல்லைதான் என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு