வாய் துர்நாற்றம் போகும் வழிகள்
போதுமான அளவு தண்ணீர் குடித்தால் வாய் வறண்டு போவதை தடுக்க முடியும் .
வாயில் தங்கி இருக்கும் பாக்டீரியாக்களும், உணவு துகள்களும் வாய் துர்நாற்றத்திற்கான முதன்மை காரணங்களாகும்.
இவை தண்ணீர் அடிக்கடி குடிக்கும் போது வாயிலிருந்து வெளியேற்றப்படும்.
சிகரெட், புகையிலை சார்ந்த பொருட்கள் வாயை வறண்டு போக செய்து துர்நாற்றத்தை வாயிலேயே தங்கி இருக்க செய்துவிடும். எனவே அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
தினமும் இரண்டு முறை பல் துலக்குவதால், பல் இடுக்குகளில் தங்கி இருக்கும் உணவுப் பொருட்களை வெளியேற்றவும், பல்லில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கவும் உதவும் .
எனவே வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மிட்டாய்கள், பபுள் கம்களை சாப்பிடுவதும் நல்ல பயன் தரும். இவற்றை சாப்பிடும் போது வாயில் அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கும்.
இதனால் வாய், வறண்டு போகாது.
உற்பத்தியாகும் உமிழ்நீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும்.
இதனால் 90 சதவீதம் குறையும்.
சர்க்கரை நோயாளிகள் இவற்றை தவிர்த்து விடலாம்.
இதே போல் கிராம்பு, சீரகம் போன்றவற்றையெல்லாம் உணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால் உமிழ்நீர் சுரப்பு அதிகமாகும் இதுவும் துர்நாற்றம் போக்க நல்ல தீர்வு தரும்.