ஆரோக்கியமான நண்பன் கருவேப்பிலை
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கருவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கருவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா ?
கருவேப்பிலியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது .
கருவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் பேர் சொல்ல கேட்டிருப்போம் தொடர்ந்து 120 நாட்கள் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்களை கவனியுங்கள் .
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வந்தால் வயிற்றை சுற்றி உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம் .
ரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கருவேப்பிலியை பச்சையாக உட்கொண்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
கருவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமணி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
கருவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காண்பதோடு முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளி தேக்கத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கி இருந்த சளி முறிந்து வெளியேறிவிடும் .
கருவேப்பிலை சாறு உட்கொண்டு வந்தால் கல்லீரலில் தங்கி உள்ள தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும் .
மேலும் கருவேப்பிலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.