மனவளம் காக்கும் எளிய பழக்கங்கள்
தூக்கம் முக்கியம்
போதுமான நேரத்துக்கு முறையாக தூங்குவது உடல் நலனுக்கும் அவசியம்.
மனவளம் காக்கவும் இது உதவும்.
தினமும் ஒரே நேரத்துக்கு தூங்க போய் சரியான நேரத்துக்கு படுத்தால் ஆழ்ந்த உறக்கம் சாத்தியம்.
அது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
சமூக வலைதளங்களை குறையுங்கள்
பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவது மன உளைச்சலை ஏற்படுத்தும்.
யார் யாருடைய பிரச்சினைகளையோ நினைத்து கோபத்தில் கொந்தளிப்போம்.
நண்பர்களை நாடுங்கள்
தனிமையை எப்போதுமே ஆபத்தானது.
நல்ல நண்பர்களை உடன் வைத்திருங்கள் ,
அடிக்கடி அவர்களுடன் உரையாடுங்கள்.
உங்களின் நல்ல முயற்சிகளை பாராட்டும் உற்சாகமாக எப்போதும் பேசும் நண்பர்கள் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி கொடுப்பார்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் வலிமை தரும் உடற்பயிற்சி.
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது சுரக்கும் ஹார்மோன்கள் உங்களின் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உற்சாக மனநிலையை தருகின்றன.
கடினமான உடற்பயிற்சிகளை செய்வதால் நல்ல தூக்கம் வரும்.
அந்த வகையிலும் அது மனசுக்கு நல்லது.
ஓய்வு எடுங்கள்
தினமும் எத்தனை மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்ற வரையறை வைத்திருப்பதே காரணமாகத்தான்.
அதிக அழுத்தம் தரும் சூழல்
வேகமாக ஓடும் உலகம் இதற்கு நடுவிலும் போதுமான ஓய்வு எடுங்கள்.
அதுவே உங்களை மறுநாள் உற்சாகமாக உழைக்க வைக்கும்.
நேர்மறையாக நினையுங்கள்
உங்களை சுற்றி எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் எவ்வளவு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் எப்போதும் நேர்மறையாகவே நினையுங்கள்.
இல்லாவிட்டால் மனம் சோர்ந்து எதையுமே செய்ய முடியாத நிலைக்குப் போய் விடுவீர்கள்.
சரியாக சாப்பிடுங்கள்
துரித உணவுகளும், சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.
காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் என்று சாப்பிடும் போது மனம் உற்சாகம் அடைகிறது.
ஆரோக்கிய உணவை சாப்பிடுங்கள்.
நேசிப்பதை செய்யுங்கள்
நாம் மிகவும் நேசிக்கும் ஒரு செயலை செய்வதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்க வேண்டும்.
அது நம் மனதை சுறுசுறுப்பாக ஆகும்.
மிகக் கடினமான வேலைகளை கூட செய்வதற்கான சக்தி அப்போது கிடைக்கும் .
எனவே நேசிக்கும் ஒரு பழக்கம் விளையாட்டு என்று எதையாவது எப்போதும் செய்யுங்கள்.
விமர்சகராக மாறாதீர்கள்
எப்படிப்பட்ட சரிவை சந்தித்தாலும் உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
எனக்கு திறமை இல்லை நான் தோல்விகளை சந்திக்கவே பிறந்தவன் என்பது போன்ற நினைப்புகள் ஆபத்தானவை .
உங்களுக்கு நீங்களே மோசமான விமர்சகராக மாறாதீர்கள்.