பூண்டின் பயன்கள்
பூண்டு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பல வகையில் நமக்கு பயன் தருகிறது.
உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற பயன்கள் உள்ளன.
பூண்டில் அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட நிறைய நன்மைகளை தருகிறது.
பூண்டில் அலிசின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது.
இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
பெரும் உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்கும் நல்ல பலன் தருகிறது.
பூண்டு பல் ஐந்து எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அரைத்து தூள் செய்து பால் கலந்து உண்டு வர ரத்த ஓட்டம் சரியாகும்.
பாலில் பூண்டை வேகவைத்து அதை அருந்தி வர தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும்.
வயிற்றுப் பிரச்சனைகளை தீர்ப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது.
வாயுவை அகற்றி அஜீரணத்தை குறைத்து பசியின்மையை போக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.
நீரழிவு நோய்களின் ரத்த அளவை குறைக்கிறது.
பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல் குழாயில் உள்ள கெட்டி சளியை இலக்கி வெளியேற்றும்.
தொண்டை சதையை நீக்கும்.
ஐந்து பூண்டு பற்கள் எடுத்து தோல் நீக்கி, 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டை கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி, மூச்சு அடைப்பு சரியாகும்.
மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
10 வயதுக்குட்பட்டவர்கள் தினமும் இரண்டு பூண்டு பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் மூன்று பூண்டு பற்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் ஐந்து பூண்டு பொருட்களும் பனங்கற்கண்டுடன் சேர்ந்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்பு கட்டி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.