கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள்

கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள்
அவசியமான விஷயத்துக்கு கோபம் வருவது இயற்கை.

 ஆனால் தொட்டதுக்கெல்லாம் கோபம் வருவதும், அதிக நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதும், மனதளவிலும், உடலளவிலும், மோசமான பாதிப்பை உண்டு பண்ணும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உடல் உணர்ச்சி ரீதியான எதிர் விளைவுகளுக்கும் வழி வகுக்கலாம். எனவே அடிக்கடி கோபப்படுவர்களாக இருந்தால் கோபத்தை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியமானது .

கோபத்தை கட்டுப்படுத்தும் எளிய வழிகள் சிலவற்றை பார்ப்போம்:

 கோபம் அதிகமாக இருக்கும் போது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கோபத்தை இன்னமும் அதிகரிக்கச் செய்யும்.

 அதனால் இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று சிறிது நேரம் நடந்து விட்டு வரலாம்.

 கோபப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அல்லது எந்த நிகழ்வாக இருந்தாலும் அதைப்பற்றி சிந்திப்பதை சில மணி நேரம் தள்ளிப் போடுங்கள்.

 இது பெரிய விரிசலை உண்டு பண்ணாது, என்பதோடு தவறுகளை திருத்திக் கொள்ளும்.

கோபம் வரும்போது பதற்றத்துடனும் கூடிய சுவாசம் இன்னும் ஆக்ரோசமாக காட்டும்.

 மேலும் சீரற்ற சுவாசத்தினால் இதயம் பலவீனம் ஆகலாம் . எனவே மூச்சை சில நிமிடங்கள் உள்ளெழுத்து எதுவாக வெளியே விட்டு சுவாசத்தை கட்டுப்படுத்தலாம். இதனால் கோபம் தணிவதோடு, மனதும் அமைதியாகும்.

 எல்லாம் சரியாகிவிடும். ஆல் இஸ் வெல் போன்ற வார்த்தைகள் மனதை அமைதிப்படுத்தும்.

அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப தனக்குத்தானே சொல்லிக் கொள்வது கோபம், விரக்தி போன்ற கடினமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

 கோபத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் அமைதி காப்பதும் மிகவும் நல்லது.

 ஏனென்றால் கோபத்தில் கண்ட்ரோல் இல்லாமல் வெடித்து விடும் வார்த்தைகள் நெருக்கமானவர்களையோ ? அல்லது குடும்ப உறுப்பினர்களையோ ? காயப்படுத்தி விடும் . பின்னர் கோபம் தணிந்து வருத்தப்படுவதை விட மௌனமாக இருப்பது பல பிரச்சனைகளை தவிர்க்க கூடும்.

 கோப உணர்வு அதிகமாக இருக்கும் போது கொதிக்கும் மனநிலையில் உடலையும், மூளையையும் அமைதிப்படுத்த கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
 மென்மையான இசை கேட்பது, படம் வரைவது, குழந்தைகளுடன் விளையாடுவது, மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை மனதை அமைதி படுத்த உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை