குழந்தை வளர்ப்புக்கு தெளிவான வழிகள்

குழந்தை வளர்ப்புக்கு தெளிவான வழிகள் 
போன மாதம் வரை எல்லோரும் அக்கறையுடன் பராமரித்து உள்ளங்கையில் தாங்கிய ஒரு கர்ப்பிணி பெண் இந்த மாதம் பச்சிளை குழந்தைக்கு அம்மாவாகி விடுவார்.

 அவர் வாழ்க்கையே அதன் பின் மாறிவிடும்.

 தூக்கத்தை தொலைத்து குழந்தையை பராமரிப்பது, நேரத்துக்கு பால் கொடுப்பது, குழந்தை அழுதால் சமாதானம் செய்வது, குழந்தையை அடிக்கடி சுத்தம் செய்து டயாபர் மாட்டி விடுவது என்று 24 மணி நேரம் போதாது அளவுக்கு வேலைகள் அணிவகும்.

 இந்த வேலைகளை விட நமக்காக நேரம் செலவழித்து சரியாக சாப்பிடவோ, ஓய்வெடுக்கவும் முடியவில்லை என்ற ஏக்கம் தான் புதிதாக தாயான பெண்களை வாட்டி வதைக்கும்.

 அதை சமாளிப்பது எப்படி.

 குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே பராமரிப்பு வேலைகளுக்கு தயாராகி விடுங்கள்.

 குழந்தைகளுக்கான அறையது?, அங்கு என்னவெல்லாம் வைத்திருக்க வேண்டும்?, என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும்?, குழந்தைகளை குளிக்க வைப்பது யார்?, குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ளும்போது அந்த அம்மாவுக்காக சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்வது யார்? என்று எல்லாவற்றையும் கணவன் மனைவி இருவரும் இணைந்து திட்டமிடுங்கள்.

 ஆரம்ப நாட்களில் தூக்கத்தை இழந்து நிறைய சிரமப்பட வேண்டி இருக்கும்.

 எனவே பிரசவத்துக்கு முந்திய மாதத்தில் போதுமான ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

 வீட்டில் மூத்த பெண்கள் யாராவது கூடவே இருந்து உதவிகள் செய்து பார்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நாட்களை கடந்து வர முடியும்.

 குழந்தை பிறந்து ஆரம்ப நாட்களில் அப்பா, அம்மா இருவருக்குமே கடுமையான வலிகள் இருக்கும்.

 அடிக்கடி குழந்தையை பார்க்க வரும் உறவினர்கள் அவர்களை உபசரிப்பது, இரவு நேரத்தில் திடீரென விழித்துக் கொண்டு அழும் குழந்தையை பராமரிப்பது என்று இந்த வேலைகளை செய்யும் போது மற்ற வேலைகள் குறைவாக இருந்தால் நல்லது.எனவே கடினமான வேறு வேலைகளை அந்த நாட்களில் தவிர்த்து விடுங்கள்.

 காலையில் எத்தனை மணிக்கு விழிப்பது, எத்தனை மணிக்கு ஆபீஸ் கிளம்புவது, இந்த நேரத்தில் எந்தெந்த வேலைகளை செய்வது என்று வீட்டில் எல்லோருக்கும் சில நிதிகள் இருக்கும்.

 ஒரு குழந்தை வீட்டுக்கு வந்ததும் இந்த நடைமுறைகள் எல்லாமே மாறிவிடும்.

 குழந்தை உங்களுக்கு கொடுக்கும் நேரத்தை பொறுத்தே மற்ற வேலைகளை கவனிக்க முடியும் எனவே டைம் டேபிளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு குழந்தை அனுபவிக்கும் நேரத்தில் உங்களின் மற்ற வேலைகளை செய்து பழகுங்கள்.

 குழந்தை எந்த நேரத்தில் பசி எடுத்து அழும், எந்த நேரத்தில் விழித்துக் கொள்ளும், எவ்வளவு நேரம் தூங்கும் என்று எல்லாமே இரண்டு மூன்று வாரங்களில் பழகிவிடும். அதற்கு ஏற்றபடி நீங்கள் தயாராகி விடுங்கள்.

 வீட்டில் இருக்கும் எல்லா அறைகளிலும் குழந்தைகளுக்கான டயாபர் சுத்தம் செய்யும் பொருட்கள் என்று எல்லாமே கைவசம் இருக்கட்டும்.

 பெரியவர்கள் தங்கள் வசதிக்காக குழந்தையை அவ்வப்போது வெவ்வேறு அறைகளுக்கு தூக்கிப் போவார்கள். அந்த நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தால் தூக்கிக் கொண்டு அவதிப்பட வேண்டிய தேவை இயலாது.

 குழந்தைக்கு பால் ஊட்டும் நேரத்தில் அம்மா என்ன சாப்பிடுவது, குழந்தை காரணமே இல்லாமல் அழுதால் என்ன செய்வது என்பது போல புதிதாக தாயாகும் பெண்களுக்கு யாராளமான சந்தேகங்கள் எழும் .

மருத்துவரிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு தெளிவு பெறுங்கள்.

 உறவினர்களில் மூத்த பெரியவர்கள், சமீபத்தில் தாயான பெண்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவார்கள்.

 குழந்தையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளும் செய்வது ஆரம்ப ஆறு மாதங்களில் சாத்தியமே இல்லை.

 எனவே அந்த நாட்களில் கூடுதலாக வேலையாட்கள் வைத்துக் கொள்ளலாம்.

 அல்லது ஏற்கனவே இருப்பவருக்கே கூடுதல் வேலைகள் கொடுத்து விடலாம்.

 வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, தோட்டத்தை பராமரிப்பது என்று எல்லாவற்றையுமே வேறு ஆட்களிடம் ஒப்படைக்கலாம்.

 சமையலை இன்னொருவர் செய்தால்தான் குழந்தையை அம்மா முழுக்க கவனமெடுத்து பார்த்துக் கொள்ள முடியும்.

 குழந்தையை பராமரிக்கும் இந்த ஆரம்ப நாட்களில் கணவன், மனைவி இருவருமே இணைந்து பணிகளை செய்ய வேண்டும்.

 குழந்தை தூங்கும் நேரத்தில் அம்மாவும் தூங்கி ஓய்வெடுத்தால்தான் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியும்.

 எனவே அதற்கு ஏற்றபடி மற்ற வேலைகளை கணவன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு இயல்பு உண்டு .

அதன்படியே அந்த குழந்தை இருக்கும்.

 சில குழந்தைகள் இரவில் சமத்தாக தூங்கும்.

சில குழந்தைகள் நள்ளிரவில் விழித்திருந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அதிகாலையில் தான் ஓய்வெடுக்கும்.

 பக்கத்து வீட்டு குழந்தை மாதிரி நம் குழந்தை இல்லையே என்று நினைத்தால் குழந்தை மீது கோபம் வரும் .

குழந்தையின் இயல்புக்கு ஏற்றபடி பெரியவர்கள் மாறிக் கொள்வது சரியான வழி.

 குழந்தைக்கு இதமான சூழலை அமைத்துக் கொடுத்தால் அவர்கள் நீண்ட நேரம் நன்கு தூங்குவார்கள்.

 அதிக குளிரோ ? அதிக புழுக்கமோ? இல்லாத அறை, வெளிச்சங்கள், சத்தங்கள் கேட்காத சூழல், கொசுக்கடி போன்ற பிரச்சனைகள் இல்லாத படி வலை போட்டு மூடி வைப்பது, உருத்தாத மென்மையான படுக்கையில் படுக்க வைப்பது, குழந்தை ஈரம் செய்துவிட்டு சிணுங்கினாள் உடனே டயாபரை மாற்றுவது என்று எல்லாவற்றையும் அக்கறையுடன் செய்யுங்கள்.

 பாத்திரங்கள் எதுவுமே கழுவாமல் சிங்குல கிடக்குது, வாஷிங்மெஷினை போட்டு ரெண்டு நாள் ஆகுது ,கிச்சனை சுத்தமே செய்யவில்லை என்றெல்லாம் குற்ற உணர்வில் தவிக்காதீர்கள் .

இந்த வேலைகள் எல்லாமே காத்திருக்கும். குழந்தையை பராமரிப்பது மட்டும் உங்கள் முதல் வேலையாக நினையுங்கள்.

 சூப்பர் பெண்ணாக உங்களை நினைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள் .

உடம்பு முடியாமல் நீங்கள் படுத்து விட்டால் பிறகு குழந்தை தவித்து போகும் .
அம்மாவுக்கும் உடல் நலம் கெட்டால் அது குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் கவனமாக இருங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை