உடலை உறுதியாக்கும்
உருக்கியதை நெய் என்றாலே அது பசு நெய்தான்.
பசும்பால், வெண்ணெய், கோமியம், பஞ்சாங்கம் ஆகிய சேர்ந்தது பஞ்சகவியம் என்கிறார்கள்.
ஆனால் தமிழறிஞர் தேவநேய பாவணர் தன்னுடைய நூல்களில் பசும்பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய சேர்ந்ததுதான் பஞ்சகவியம் என்கிறார்.
உருக்கிய நெய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பார்வை கூர்மையாகும் என்கிறது சித்த மருத்துவம்.
கீரைகளில் இருக்கிற சத்துக்கள் உடலால் முழுமையாக உக்கிரகிக்க வேண்டும் என்றால் அதனுடன் உருக்கிய நெய் சேர்க்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் நெய் ஒரு துணை மருந்து.
பற்பம், செந்தூரம் போன்ற சித்த மருந்துகள் உடலில் முழுமையாக சேர வேண்டும் என்பதற்காக அதனுடன் நெய்யை சேர்க்கிறோம்.
ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளின் குடலில் உள்ள உறிஞ்சிகள் சத்துக்களை விரைவாக உறிஞ்சி ஆரம்பிக்கும்.
உள்ளும் புறமும் குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கிற காலகட்டம் அது .
அப்போது குழந்தைகளுக்கு புரதம் அதிகம் தேவைப்படும்.
புரதம், குழந்தைகளின் உடலில் சேர உதவுவது நெய்.
அதனால்தான் குழந்தையின் ஆறாவது மாதத்தில் இருந்து நெய் சேர்த்த பருப்பு சாதம் ஊட்ட ஆரம்பிக்கிறோம்.
சங்க கால தமிழர்கள் இறைச்சியை நெய்யில் பொறித்து சாப்பிட்டதாக புறநானூறு, குறுந்தொகையும் சொல்கின்றன.
சங்க நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் குறிப்பிடுகின்ற ஊண் சேர்த்த நெய் சோறு தான் இன்றைக்கு பலராலும் விரும்பப்படுகிற பிரியாணி.
நோய் அணுகா விதிப்படி குடிநீரை கொதிக்க வைத்து, வெண்ணையை நீக்கப்பட்ட தயிரை நிறைய நீர் விட்டு மோராக்கியும், நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும்.
டைனிங் டேபிளில் நெய்யை வைத்துவிட்டு சாப்பாட்டின் மீது அப்படியே எடுத்துப் போட்டு சாப்பிடுவது கூடாது.
அது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
கடந்த கால் நூற்றாண்டாக நெய் சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும் என்ற அபாண்ட பலி சுமத்தப்பட்டுள்ளது.
நெய்யை உருக்கி சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராது .
ஏற்கனவே கொழுப்பு இதய நோய் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் உங்கள் மருத்துவரை கேட்டு நெய்யை சாப்பிடலாம்.
நெய்யை உருக்கும் போது முறுங்கை இலை அல்லது கருவேப்பிலை சேர்த்தால் அவற்றில் இருக்கின்ற வைட்டமின் ஏவும் உணவில் சேரும்.
ஒரு கைப்பிடி சுடுசொற்றில் உருக்கிய நெய்யை விட்டு சாப்பிட்டு வந்தால் எப்பேர்பட்ட குடல் புண்ணும் ஆறும்.
நெய் காசநோய் வராமல் தடுக்கும்.
இரப்பை நோய்களை கட்டுக்குள் வைக்கும்.
முதல் கபலம் சோற்றை சுக்கு, மிளகு, சீரகப்பொடியும், உருக்கிய நெய்யும் சேர்த்து சாப்பிட செரிமான பிரச்சனைகளே வராது.
சோற்று கொதிநீரில் நெய் விட்டு அருந்தினால் சாப்பிட்டவுடன் வருகின்ற வாயு தொல்லை , வலி இரண்டும் படிப்படியாக சரியாகும்.
தேவைப்பட்டால் இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
பித்தம், உடல் எரிச்சல் இருப்பவர்கள் உருக்கிய நெய்யை தலையில் தேய்த்து குளித்தால் குணம் கிடைக்கும் .
ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இதை பின்பற்றலாம் உடலின் நரம்புகள் அனைத்தும் உள்ளங்கைளில் சென்று சேர்வதால் இரவில் அங்கு நெய் பூசி தடவி விட்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.