கேன் வாட்டர் குடிக்கலாமா?
நிலம், நீர், காற்று, ஆகாயம் என இயற்கையே இன்றைக்கு மாசுபட்டு வருகிறது.
நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் உலகம் மாசுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நிலம் மாசுபட்டதால் நிலத்தடி நீரும் மாசுபட்டுவிட்டது.
நீர் நிலைகளான ஆறுகள், குளங்கள், ஏரிகள் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் நீர் மாசு பாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இதனால் பூமியிலிருந்து பெறப்படும் பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போய்விட்டது.
இதன் காரணமாகவே மக்கள் கேன் வாட்டருக்கு மாறுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
ஆனால் தண்ணீரை ஃபில்டர் செய்யக்கூடாது.
கேன் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.
பாட்டலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை குடிக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி என்றால் வேறு எப்படித் தான் சுத்தமான தண்ணீரை பெற்றுக் கொள்வது என்று கேள்வி எழுப்பலாம்.
கேன் வாட்டர் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்புகள் பல மடங்கு அதிகம்.
அது போல ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்.ஓ) என்று சொல்லக்கூடிய ஆர்.ஓ நீரை மாதக்கணக்கில் குடித்து வந்தாலும் அதிக பாதிப்பு உடலுக்கு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.
ஆர்.ஓ சிஸ்டம் தண்ணீரில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு உடலுக்கு நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசத்தையும் 92 சதவீத முதல் 99 சதவீதம் வரை நீக்கிவிடுகிறது எனவே ஆர்.ஓ வாட்டர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இருதய கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம், தசை பிடிப்பு, கால்சியம் குறைபாடு, ஆகிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த நிலையில் எந்த நீரை குடிப்பது என்று உங்கள் குழப்பத்திற்கு சாதாரணமாக குழாய்களில் வரும் நீரை பிடித்து கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்தலாம் .
அதுவே போதும் அல்லது குழாய் நீரை மண்பானையில் ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருட்களையும் மண்பானை உறிஞ்சி கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.
எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானையாகும்.
40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வீட்டில் வாட்டர் பில்டர் வாங்கி வைத்திருப்பதை காட்டிலும் 40 ரூபாய் செலவில் ஒரு மண் பானையை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
Mashaallah
பதிலளிநீக்கு