மழை கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை
பெண்கள் தங்களின் தேவை மற்றும் காரணமாக வெளியே செல்வது தவிர்க்க முடியாதது. அவ்வாறு செல்லும் போது அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் தேக்கம், சாலைகளின் பள்ள மேடுகள், பாதாள சாக்கடை திறப்புகள், மின் கம்பம் போன்றவை சாலை பயணங்களை கேள்விக்குறியாகவும், சில நேரங்களில் ஆபத்தானதாகவும் மாற்றுகின்றன.
மழைக்காலம் தொடங்கும் பொழுது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் வாகனத்தின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்குகின்றதா? என சரிபார்த்துக் கொள்வது சிறந்தது.
முக்கியமாக வண்டியின் பிரேக், கியர் ஆகியவை சரியான நிலையில் இருக்கிறதா? என கவனிக்க வேண்டும்.
இதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.
மேலும் வாகனத்தில் ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர் போன்றவை சரியாக இயங்குகிறதா? என சோதித்து பார்த்துக் கொள்வது நல்லது.
மழைக்காலங்களில் வாகனத்தின் பிரேக்கு அழுத்தும் போது உடனடியாக ஒரே நேரத்தில் இரு பிரேக்குகளையும் அழுத்தாமல் மெதுவாக ஒன்றின் பின் ஒன்றாக அழுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து மெதுவாக செல்வது நல்லது.
மேலும் சாலையில் செல்லும்போது நிதானமாக பயணிக்க வேண்டும்.
எதிரில் வேகமாக வரும் வாகனம் மற்றும் அதிக சத்தம் ஏற்படுத்தும் ஹாரன் ஒலி பெண்களுக்கு எளிதில் பதற்றத்தை உருவாக்கக்கூடும்.
இருசக்கர வாகனம் உபயோகிப்பவர்கள் வாகனத்தில் செல்லும்போது ஹெட் போன் உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது.
ஏனெனில் மழைக்காலங்களில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் கவனம் வைத்து செல்ல வேண்டும் .
நான்கு சக்கர வாகனங்களில் செல்வோம் பின்னால் வரும் வாகனங்களின் சத்தம் கேட்குமாறு ஒலிபெருக்கிகளை குறைவான சத்தத்தில் வைத்துக் கொள்வது சிறந்தது.
தனியாக செல்லும் பொழுது தெரியாத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆட்கள் வழிமறித்தால் நிறுத்தாமல் செல்வது பாதுகாப்பானது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் குடைகளையும் உபயோகிக்காமல் ரெயின் கோட் அணிந்து செல்லலாம்.
விளம்பரப் பதாகைகளின் அருகில் செல்லாமல் விலகி செல்வது சிறந்தது.
மழைக்காலங்களில் வளைவுகளில் திரும்பும்போது வண்டியை நிறுத்தும் போதும் இன்டிகேட்டர் ஒளி மற்றும் ஒலி சமிக்கையை செய்வது அவசியமானது.
மற்ற காலங்களை விட மழைக்காலங்களில் சாலைகள் செல்லும் போது அதிக கவனத்துடனும் முன் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.