அடி ஆத்தி..... அற்புத அத்தி.....

அத்திப்பழம் தரும் அற்புத நன்மைகள் 
அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும்.

 இதில் இருந்து பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ, வைட்டமினில் ஆண்டி ஆக்சிடெண்ட் கள் நிறைந்துள்ளன.

 கிரேக்கர்கள் காலத்தில் இருந்தே அத்திப்பழம் குழந்தை பேறுக்காக சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இது கரு உருவாக உதவும் என்பது ஆய்விலும் கூறப்பட்டுள்ளது .

ஏனெனில் இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 அத்திப்பழத்தில் பிரீ பயோடிக் என்னும் பண்பு உள்ளது.

 இது செரிமான மண்டலத்தின் வேலையை சிறப்பாக மாற்ற உதவும்.

 தினசரி இரண்டு பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

 உடலும் வளர்ச்சியடைந்து வறுமை அடையும் .

உடல் எடை குறைக்க நினைப்போர் உலர்ந்த அத்திப்பழத்தை இரண்டு சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வயிறு முழுமையாகிவிடும்.

 இதனால் நீண்ட நேரம் பசிக்காது.

 சாப்பாடு குறைவாக சாப்பிட தோன்றும்.

 அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கல் நிவர்த்திக்கு நல்லது.

 வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப்பழங்கள் இரண்டு அல்லது மூன்று என தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி சரியாகும்.

 பொட்டாசியம் சமநிலையில் இல்லாத போது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே இதை சரி செய்ய நிறைவான பொட்டாசியம் சத்துக் கொண்ட அத்திப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு உதவும்.

 உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் .

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய் புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

 அத்தி காய்களை சமைத்து உண்டுவர ரத்த விருத்தி ஏற்படும் பித்தம் தணியும்.

 வெள்ளைப்படுதலை தடுக்கும் ஆண்மையை பெருக்கும் அத்தி எளிதில் ஜீரணம் ஆவதுடன் கல்லீரல் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது .

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

 அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் தோலின் நிறம் மாற்றம் ஆகியவை குணமாகும்.
 அதை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை