பித்தம் பாேக்க இது பாேதும்

பித்தம் பாேக்க இது பாேதும்
புதினாவை சமையலில் சேர்த்து சமைத்தால் அதன் மனம், உணவு பொருள்களின் சுவையை கூட்டும்.

 புதினா இலைகளுடன் உடம்பின் பல நோய்களுக்கு மருந்துகளாக பயனளிக்கும்.

 புதினா இலைகளை சுத்தம் செய்து துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும்.

 டீ தயாரிக்கும் போது டீ தூள் உடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

 புதினாவை வெந்நீரில் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.

 பச்சையாக வெங்காயத்துடன் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.

 ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து டீ தூளுக்கு பதிலாக உபயோகப்படுத்தினால் சுவை மிக்க டீ கிடைப்பது உடன் பித்தம் , வாந்தி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

 பித்தம் சம்பந்தமான நோய்களை நீக்கும் வலிமை கொத்தமல்லிக்கு உண்டு.

 சுக்கு, தனியா, கருப்பட்டி மூன்றையும் கலந்து காபி தயாரித்து குடித்தால் பித்தம் நீங்கிவிடும் .
அகத்திப்பூ பித்தத்தை போக்க வல்லது. மேலும் உடல் அலர்ஜியையும் போக்கும் பூவை உணவில் சேர்த்து வந்தால் போதும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை