உமிழ்நீரின் ஏழு உண்மைகள்
உமிழ்நீர் என்பதும் முக சுழிப்பவர்கள், அதிகம் ரத்தம், வியர்வை, கண்ணீர் போன்ற உடல் துருவங்களுக்கு இருக்கும் உயர்வு நிகழ்ச்சியும் சென்டிமென்ட்டும் ஏனோ உமிழ்நீருக்கு இல்லை .ஆனால் உமிழ்நீர் மனித உடலில் செய்யும் வேலை மகத்தானது.
1. உமிழ்நீரில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், என்சைவுகள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உட்பட என்னென்ன உணவுப் பொருட்கள் எல்லாம் நாம் சாப்பிட்டோமோ? அதன் அத்தனை வேதி பண்புகளும் இருக்கும் .
2. ம்யூகின்ஸ் எனப்படும் உயர்வு சுரப்பு தான் உமிழ்நீரில் பிரதானமாக உள்ளது.
புரோட்டின் மூலக்கூறுகளால் ஆன இது நுண்ணிய மைரோஸ்கோபிக்
பால்பேரிங்களை போல செயல்படுகின்றன.
உணவை மெல்லவும், விழுங்கமும், பேசவும், பற்களை ஈறுகளோடு வலுவாக பிணைக்கவும், பற்களில் பற் சாேத்தை போன்றவற்றிலிருந்து காக்கும் .
நல்ல பாக்டீரியா அமிலங்கள் வாயிலேயே தங்கி இருக்கவும் இது உதவுகிறது.
3. எச்சில் ஊறுதல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பற்கள் ஈறுகள் பாதிப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் இதுதான் பற்களையும் ஈறுகளையும் வாயில் உள்ள தாது உப்புகளை பயன்படுத்தி வாயை ஆரோக்கியமாக வைக்கவும் வலுவாக்கவும் வைத்திருக்கிறார்.
4. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும் ஸ்டார் செய்யும். கொழுப்பையும் உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான என்சைம்கள் உமிழ் நீரில் உள்ளன.
இவ்வாறு உணவை உமிழ்நீர் சுலபமாக குலைத்துக் கூழ் ஆக்குவதால் உணவை விழுங்கும் திறனும், செரிமானிக்கும் திறனும் சுலபமாகின்றன.
5. நாவின் சுவை நரம்புகள் உணவின் ருசியை உணர்த்தும்.
அதன் மூலக்கூறுகளின் பண்புக்கு ஏற்ப உமிழ்நீர் சுரக்கிறது.
இதனால் உணவுப்பொருட்கள் எளிதாக குழைவாக்கப்பட்டு செரிமானத்துக்கு தயாராகிறது .
6. உமிழ்நீரில் நுண் கிருமிகளுக்கு எதிராக போராடும் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
தோல் செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இந்த ஆன்டிபாடி உமிழ்நீரில் அதிகம் உள்ளதால் தான் வேறு இடங்களில் ஏற்படும் புண்களை விட வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகின்றன.
7. ஆல்கஹால், புகைபிடித்தல், போதை பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றை உமிழ்நீரை பரிசோதிப்பதன் மூலம் எளிதாக கண்டுபிடிக்க முடியும் நோய்களை கண்டறியவும் எச்சில் பயன்படுகிறது