தினம் ஒரு கசாயம்

தினம் ஒரு கசாயம் 
திங்கள்கிழமை 

வெற்றிலை நான்கு, மிளகுத்தூள் கால் தேக்கரண்டி கொதிக்க வைத்து குடித்தல் நாக்கு சுத்தமாகும். கபம் சேராது .

செவ்வாய்க்கிழமை

கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சரிவர கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

 புதன்கிழமை

தூதுவளை , கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சம அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும் .

வியாழக்கிழமை 

சுக்கு , மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

 வெள்ளிக்கிழமை 

வெந்தயம், தனியா சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்த நீர் வெளியேறிவிடும்.

 சனிக்கிழமை 

முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

 ஞாயிற்றுக்கிழமை 
சுக்குமல்லி காபி குடிக்கலாம் . 

இப்படி பழகிக் கொண்டால் எந்த வியாதியும் வராது.

 உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை