அழகு குறிப்புகள்
வெட்டிவேர் பொடி, நெல்லி பொடி, பன்னீர் சேர்த்து பசையாக்கி வியர்க்குரு இருக்கும் இடத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற விட்டு குளித்தால் சரியாகிவிடும்.
மாதுளம் பழச்சாறு, பன்னீர் இரண்டையும் சரிவிகிதம் சேர்த்து கண்களுக்கு கீழ் தடவி கண்களுக்கு மேல் வெள்ளரி துண்டு வைத்துவிட்டு தூங்கினால் போதும் கண்கள் புது பொலிவு பெறும்.
பால் காய்ச்சும் போது ஆடை எடுத்து அதில் நெல்லி சாறு கலந்து உதட்டில் பூசினால் உதடுகள் சிவக்கும்.
கடலை மாவு, அரிசி மாவு ஆகியவை ஒரு தேக்கரண்டி பன்னீர், இரு தேக்கரண்டி இளஞ்சூட்டு ஆரஞ்சு சாறு கலந்து கழுத்துப் பகுதியில் போட்டு 15 நிமிடங்களுக்கு கழுவினால் கருமை நிறம் நீங்கும்.
பேரிச்சம் பழங்களை தேனில் ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து அரைக்க வேண்டும். இதை வைத்து பேசியல் செய்து மசாஜ் பண்ணுங்கள் ஃபார்லரில் செய்தது போன்ற எஃபெக்ட் உருவாகும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழச்சாறு, அரை தேக்கரண்டித்தேன். சிறிதளவு சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசினால் ஜொலிக்கும்.