தமிழ்நாட்டில் உள்ள தீவுகள்
நான்கு திசைகளிலும் நீரால் சூழப்பட்ட விதம் தீவுகள் கடல் ஆறுகளால் சூழப்பட்ட தீவுகள் தமிழ்நாட்டில் பல உள்ளன.
அவை:
ஆதாம் பாலம்
ராமேஸ்வரத்துக்கும் இலங்கையில் உள்ள மன்னர் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களான ஒழுங்கற்ற மேடுகளை ஆதாம் பாலம் இது ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
30 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலமே மன்னார் வளைகுடாவையும் பாக் ஜல சந்ததியும் பிரிக்கின்றது .
குரு சடைதீவு
மன்னர் வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தின் அருகே அமைந்துள்ள இந்தத் தீவு சுற்றுச்சூழல் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது.
இங்கு பவளப்பாறைகளும், டால்பின்களும், உட்பட அரிய வகை கடல் உயிரினங்களும் வாழ்கின்றன.
ஹரோதீவு
தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகே இந்த தீவு உள்ளது.
உள்ளூர் மக்களின் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
நல்ல தண்ணி தீவு
மன்னர் வளைகுடாவில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் மூன்று தீவுகளில் ஒன்று குரு சதை, முதல் தீவு மற்றும் இரு தீவுகள் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தின் ஒரு பகுதியாக நல்ல தண்ணீர் தீவு விளங்குகிறது.
பாம்பன் தீவு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் ஜல சந்தியில் அமைந்துள்ளது.
இது ராமேஸ்வரம் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.
இது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
ஸ்ரீரங்கம் தீவு
காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள ஆற்று தீவாகும்.
இது திருச்சி நகருக்குள் அமைந்துள்ளது.
இந்த தீவின் மையப் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
குவிபில் தீவு
சென்னை அடையாறு மயிலாப்பூர் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள தீவு.
இது அடையாறு நதியால் உருவாக்கப்பட்டுள்ளது.