தேங்காயில் இவ்வளவா ...?

தேங்காயில் இவ்வளவா ...?
பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தேங்காயின் பயன்பாடு அதிகம்.

 அதிலும் சமையலில் அதிக அளவு தேங்காயும், தேங்காய் பாலும் பயன்படுத்தப்படுகிறது.

 ஆனால் சில சமையலில் தேங்காய் அளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள்.

 அது உண்மைதான்.

 தேங்காயில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு .

ஆனால் தேங்காயை சமைத்து சாப்பிடும் போது தான் அது கொழுப்பாக மாறும்.

 தவிர பச்சையாக சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுத்தாது.

 அதிலும் தேங்காயை உடைத்து அரை மணி நேரத்தில் பச்சையாக சாப்பிடும் போது அதில் ஏராளமான சத்துக்கள்.
 நமது உடல் ஆரோக்கியத்தை காக்கிறது .

தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் உள்ள நன்மைகளைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 தேங்காயின் நன்மைகள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றி ரத்தத்தை சுத்தமாக்கும்.

 தேங்காய் பாலில் சிறிதளவு கசகசா, பால் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சரியாகும்.

 உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

 தேங்காயை துருவி, சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை வேலைகளில் கொடுத்து வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

 தாய்ப்பாலில் இருக்கும் மேலோனாரின் சக்தியானது தேங்காயைத் தவிர வேறு எந்த பொருளிலும் இல்லை என்று ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர்.

 புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

 உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் பால் பருகி வரும்போது அவை உடல் எடையை கட்டுப்படுத்தும்.

 தேங்காய் நீரை பருகி வந்தால் சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல் குணமாகும்.

 பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு தேங்காய் பால் கொடுத்து அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்தனர் .

இவ்வளவு சிறப்புடைய தேங்காய் மற்றும் தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 எனவே தவறாமல் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை