கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் 
மிகப்பெரிய நோய்களை கூட வீட்டில் இருந்தபடியே எளிதாக சரி செய்யக்கூடிய பல மூலிகைகள் நமது நாட்டில் உண்டு .

அப்படி ஒரு அற்புதமான மூலிகைதான் கீழாநெல்லி .

இதற்கு கீழக்காயை நெல்லி கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு .

இது குறுஞ்செடி வகையை சார்ந்தது.

 நீர் நிலைகள், வயல் வரப்புகளிலும் வளரக்கூடியது.

 கீழாநெல்லியின் நிலைகளில் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இருப்பதால் இதன் இலைகளில் கசப்பு சுவை மிகுதியாக இருக்கும்.

 பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று.

 கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது .

இதன் வேர் 10 கிராம் எடுத்து இடித்து பால் அல்லது மாேரில் கலந்து குடித்தால் கல்லீரலை பலப்படுத்தி கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது .

இத்துடன் சாற்றை மஞ்சள் உடன் கலந்து பூச சொரியாசிஸ் சரியாகும்.

 கீழாநெல்லி செடியை நன்கு அரைத்து சொறி, சிரங்கு பட்டைகளில் பற்று போட்டால் குணமாகும்.

 இதன் நிலையை எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு தேய்ப்பதால் உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன் கண்களின் சிவப்புத் தன்மை ,எரிச்சலை போக்குகிறது.

 பார்வை தெளிவாகும்.

 கீழாநெல்லி செடியை நன்றாக மென்று பல் துலக்கி வந்தால் பல்வலி குணமாகும் .

சிறுநீர் பாதை எரிச்சலை குணமாக்குகிறது.

 மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல் , பசியின்மை ஏற்படும்.

 இது அதிகரிக்கும் போது கல்லீரல் வீக்கம் ஏற்படும். இதை சரி செய்ய கீழாநெல்லி உதவுகிறது.

 கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோளில் பூசினால் அரிப்பு குணமாகும்.

 மேலும் இதனையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊரை விட்டு குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

 கீழாநெல்லி செடி , கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமபங்கு எடுத்து காய்ச்சிய பால் விட்டு அரைத்து காலை மாலை இருவேளை பாலுடன் கோலி குண்டு அளவு குடித்து வந்தால் சில நாட்களிலேயே மஞ்சள் காமாலை குணமாகும்.

 கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை மேலே இருவேளைத் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.
 விஷக்கிருமிகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை