குழந்தைகள் வளர்க்கும் முறை அறிவோம்
குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பதில் தான் அவனின் எதிர்காலம் உள்ளது.
குழந்தைகள் அவர்கள் வளர்கிறபடி வளரட்டும் என்று விடக்கூடாது.
குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பதை விட சவாலான ஒன்று.
சிறிய வயது முதலே குழந்தைகளுக்கு நல்லது கெட்டது போன்றவற்றை எடுத்துக் கூறி வளர்க்க வேண்டியது அவசியம் .
அப்போதுதான் குழந்தைகளிடம் நல்ல பண்புகள் உண்டாகும்.
இது போன்ற நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும்.
உணர்வு வெளிப்பாடு
முதலில் உங்கள் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் கவலையில் இருந்தால் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க வேண்டும்.
அவர்கள் பதிலை கேட்டு அதற்கான முடிவுகளை சொல்ல வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்து நடந்து கொண்டால் குழந்தைகள் உங்களிடம் நண்பர்கள் போல் பழகுவார்கள்.
எந்த பிரச்சனை அவர்களுக்கு நடந்தாலும் உங்களிடம் தெரியப்படுத்துவார்கள்.
அடிப்பது போல கோபம் வரும்
பெற்றோருக்கும், குழந்தைக்கும் சண்டை வரும்போது கத்துவது, அடிப்பது போன்ற செயல்கள் பெற்றோர்கள் செய்வார்கள்.
சண்டை வரும் போது மனதை அமைதிப்படுத்துங்கள்.
நீங்கள் அமைதியாக இருந்தால் குழந்தை கோபப்பட மாட்டான்.
நல்லது கெட்டது
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் எது என்று ஆராய கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் தான் அவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது எந்த பழக்கம் நல்லது, எந்த பழக்கம் கெட்டது என்று தேர்வு செய்வார்கள்.
உரையாட வேண்டும்
உங்கள் குழந்தைகளுடன் தினமும் பேச வேண்டும் .
அவர்களிடம் பேசும் போது பள்ளியில் நடந்த விஷயங்களை கேட்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லும் வழியில் நடந்தது என்று நீங்கள் ஒரு நாள் கேட்க ஆரம்பித்தால் மறுநாளில் இருந்து அவர்களை சொல்லிவிடுவார்கள்.
குழந்தைகளை பாராட்ட வேண்டும்
மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தீர்கள் என்றால் உங்கள் குழந்தைகள் ஒழுக்கமுள்ள குழந்தைகளாக இருக்கும்.