உடலின் நண்பன் புதினா

உடலின் நண்பன் புதினா
வாய், தொண்டை புண்ணுக்கு புதினா கீரையை தொடர்ந்து சாப்பிட்டு குணம் பெறலாம்.

 புதினா கீரையை தேவையான அளவு நீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து இந்த நீரை குடித்தால் வாயு தொல்லை, வயிற்றுப் பொருமல் நீங்கும்.

 சளி, கபம் மற்றும் தொடர்ந்து இருக்கும் இருமல் கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.

 வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் புதினா இலையை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கி வாய்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

  இதனால்தான் மெந்தோ ஃபிளஸ், சுவீங்கம், மவுத் வாஷ் போன்றவற்றில் புதினாவை பயன்படுத்துகின்றனர்.

 ஆயுர்வேத மருத்துவத்தில் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் உடம்பு வலிகளை நீக்க உதவுகிறது.

 புதினாவில் உள்ள நறுமணம் கார்மினேட்டிவ் ஏஜென்ட் போல செயல்பட்டு வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்ற உதவுகிறது.

  குடல் நோய்கள் ,மாதவிடாய் பிரச்சனைகள் , ஒற்றைத் தலைவலி, குமட்டல், சைனஸ் போன்றவற்றை மட்டப்படுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு .

மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து மீள உணவில் தொடர்ந்து புதினாக் கீரைகையை பயன்படுத்தலாம்.

 புதினாவில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மேங்கனீஸ் சத்துகள் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கிறது.


புதினாவில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உடல் சருமத்துக்கு பொலிவு தருவதோடு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கிறது.

 புதினா கீரையின் அதிக அளவு உள்ள சாலி சிலிக் அமிலம் முகப்பருவுக்கு எதிராக செயல்படுகிறது.

 புதினாவின் அப்போப்டோஜெனிக் செயல்பாடு ரத்தத்தில் உள்ள கார்டி சோலின் அளவை கட்டுப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

 புதினாவில் உள்ள மெத்தனால் ரத்த கொதிப்பு நீக்கியாக செயல்படும் தன்மை கொண்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி தங்கள் உணவில் புதினா கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.
 புதினாவில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட், மெந்தோல் பைட்டோ, நியூட்ரியண்ட்கள் நாம் உண்ணும் உணவை நன்கு ஜீரணிக்க என்சைம்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

கருத்துரையிடுக

புதியது பழையவை