குங்குமப்பூ சாப்பிட்டா கலரா குழந்த பொறக்குமா?
கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ பிறக்கும் குழந்தையானது அழகாக பிறக்கும் என்பதற்கு பெரிய ஆதாரங்கள் இல்லை.
என்றாலும் பிரசவ வலி இன்றி பிறக்கும்.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக்கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும்.
அதில் சில சொட்டுகள் பால் விட்டு கலந்து குலைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கரு நிறம் குறைவதை கண்கூடாக காணலாம்.
குங்குமப்பூவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு , சிறிது நேரம் ஊற வைத்து, வெண்ணெயில் கலந்து நன்றாக குலைக்கவும்.
இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும்.
உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
நகசுத்தி வந்து சேதாரமான நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ, வெண்ணெய் கலவையானது சீர்படுத்தி இழந்து அழகை மீட்டுத் தரும்.
குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் ரத்த சோக ஏற்படுவது குறையும்.
பசியை நன்கு தூண்டும்.