இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்
பெண்கள் அதிகமாக கவலைப்படும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
உணவு பழக்கம் , சுற்றுச்சூழல் மாசு, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், வேதிப்பொருட்கள் கலந்து சாம்பு பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிரலாம்.
இயற்கையான முறையில் எவ்வாறு முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்பதை இங்கு காணலாம்:
முடி வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியமானது.
உளுந்து பொடியாக அரைத்தது - அரை கிலோ
வெந்தயம் பொடியாக அரைத்தது - 100 கிராம்
செம்பருத்தி பூ நிழலில் உலர்த்தி பொடியாக அரைத்தது - 100 கிராம் இவை மூன்றையும் நன்றாக கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
பின்பு பச்சை பயறு பொடியாக அரைத்தது - 200 கிராம் எடுத்து தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
தலைக்கு குளிப்பதற்கு முன்பு உளுந்து கலவையை இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு பொடி அரைத்து தேகரண்டி இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து முடியின் வேர் கால்களில் பூசவும்.
பின் விரல் நுனியை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும் .
20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
இந்த முறையை பயன்படுத்தும் போது வேதிப்பொருட்கள் கலந்த சாம்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
கூந்தலை வறண்டு போகாமல் பராமரிக்க வேண்டியது முக்கியமானது.
ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஆலிவ் எண்ணெய் - நான்கு சொட்டு, கற்றாழை ஜெல் - ஒரு தேக்கரண்டி, ரோஜா, பன்னீர் - இரண்டு தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர் இதை அனைத்தையும் நன்றாக கலந்து கூந்தலில் அவ்வப்போது ஸ்பிரே செய்யவும் .
இதன் மூலம் தலைமுடி வறண்டு போகாமல் இருக்கும் .
முடியின் வேர்க்கால்கள் குளிர்ச்சியாகவும் ,ஆரோக்கியமாகவும் இருக்கும் .
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
பின்பு அதை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடு படுத்தவும்.
பின்பு அந்த எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
முடியின் வேர்க்கால்களில் இதை தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.