சர்ம எழிலுக்கு எட்டு டிப்ஸ்
1. சந்தன கட்டையை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தை பெறும்.
2. முருங்கை பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.
3. வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.
4. அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெள்ளம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.
5. மரிக்கொழுந்து இலையையும், சில ஆவாரை இலைகளையும் சம அளவில் எடுத்துரைத்து தலையில் தடவி வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.
6. கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளி பழம் போல் சிவந்து காணப்பட்டால் வைத்தியம் வேறு ஒன்றும் இல்லை தக்காளி தான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 10 நாட்களில் கண்களில் சிவப்பு பறந்து போய்விடும்.
7. சிறிதளவு பப்பாளி பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதியில் தடவி விடுங்கள் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கால்களில் உள்ள வெடிப்பு மறைந்துவிடும்.
8. வெள்ளை மிளகாயை பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.