பாதாம் எண்ணெயின் பலன்கள்
பாதாம் எண்ணெய் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது.
எனவே மிருதுவான பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறார்கள்.
பாதம் எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
இதில் வைட்டமின் ஈ சத்து மிகுந்திருப்பதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து தோலை பளபளப்பாக்குகிறது.
டீன் ஏஜ் வயதிலிருந்தே பாதாம் எண்ணெயை பயன்படுத்த தொடங்கினால் முதுமையான தோற்றத்தை தள்ளி வைத்து இளமையை பாதுகாக்கும்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் பாதாம் எண்ணையை கண் பகுதியை சுற்றித் தடவவும் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம்.
தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நான்கு வாரங்களுக்குள் தெளிவான பார்வை திறனை தரும்.
ஆற்றல் பாதாம் எண்ணெயிக்கு உண்டு.
தூக்கமின்மை மற்றும் சமச்சீரற்ற உணர்வு முறை இவை இரண்டும் தான் கருவளையத்திற்கு முக்கிய காரணமாகும்.
கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும் .
பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் தன்மை மற்றும் சரும துளைகளில் சேரும் அழுக்குகளை அகற்றக் கூடியவை.
சருமத்தை சுத்தப்படுத்தி பளிச்சென்று காட்சியளிக்கவும் வைக்கும் .
முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும்.
பாதாம் எண்ணெயில் ரெட்டினோல் உள்ளது .
இது முகப்பருவை குறைக்கும் தன்மை கொண்டது.
உணவில் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் வாயு கோளாறு ஏற்படாது.
புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கும்.
மலச்சிக்கல் வராது.
தசை வலியை நீக்கும் பாதாம் எண்ணெயில் வைட்டமின் டி சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு வலு சேர்கிறது.
பாதாம் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் டென்ஷனை போக்கி மன அமைதியை தரும்.