தந்தையை பேணுவோம்

தந்தையை பேணுங்கள் 
பொதுவாக தந்தைகளின் இறுதி காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும்.

புறக்கணிப்பிலும் கலிய நெருங்கி நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

 இதனால்தான் தந்தையர் தாம் உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

 குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை மதிப்பாக வாழ வழி செய்ய வேண்டும்.

 மூலையில் நிறுத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேலையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன்தான் பல பிள்ளைகள் தந்தையரை நடத்தி வருகின்றனர்.

 வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிக கொஞ்சமாகத்தான் கேட்பார்.

 ஏனெனில் கேட்டு பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர், கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர் எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார்.

 குடும்பத்தினர்தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

 வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் நாளிதழ், வார இதழ், மாத இதழ்களை வாங்கி கொடுங்கள்.

 சில்லறை செலவுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

 மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளை கொடுங்கள்.

 பேரன், பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள்.

 அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

 குடும்ப தேவைகளை பார்த்து பார்த்து செய்தவருக்கு இப்போது உங்கள் காலம் பார்த்து பார்த்து செய்வதற்கு ஒருவர் மறைந்த பின்னர் அதை செய்யவில்லையே இதை செய்திருக்கலாமே என்று எண்ணி புலம்புவதை விட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாக கழிவதற்கு வழிவகை செய்யுங்கள்.

 வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது .

ஒரு சிறிய வானொலியை வாங்கி கொடுங்கள்.

 முடிந்தால் தனி தொலைக்காட்சி பெட்டி, இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள் .

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிக மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 பெண் ஒரு கணவனை இழந்தால் தன் பிள்ளைகளுடன் போய் சேர்ந்து கொள்வாள்.

 பெண் சூழலுக்கு ஏற்றார் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

 குடும்பத் தலைவன் அதிகாரம் செலுத்தியவன், வருமானம் ஈட்டியவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை தன் அதிகாரமும் அன்பும் நெருக்கமும் காட்டக்கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மனைவியை இழந்த பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.

 அவர் மதிக்கப்பட வேண்டியவர்.

 ஒவ்வொரு மகனும் மகளும் படித்து உணர வேண்டிய பதிவு தந்தையை போற்றுங்கள் .

அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுங்கள்.
 தவறும் பட்சத்தில் காலம் பதில் சொல்லும் அப்போது உங்கள் தந்தை உங்களிடம் இருப்பாரா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை