வானம் நீல நிறத்தில் இருப்பது ஏன்?
சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன.
அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அலை நீளங்களை கொண்டவை.
வாயு மூலக்கூறுகள் நிரம்பியது.
பூமியின் வளிமண்டலம் பூமியை சூரிய ஒளி நெருங்கும்போது அதிக அலை நீளம் உடைய சிவப்பு ,ஆரஞ்சு ,மஞ்சள் நிறங்கள் வாயு மூலக்கூறுகளை ஊடுருவி சென்று விடுகின்றன.
ஆனால் குறைந்த அலை நீளம் உடைய நீலம், ஊதா உள்ளிட்ட நிறங்கள் வாயு மூலக்கூறுகளால் உறிஞ்சப்பட்டு வானம் எங்கும் சிதறுகின்றன.
அதனால்தான் வானும் நீல நிறமாக தெரிகிறது.
சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் ,சூரிய ஒளி பூமியை சந்திக்கும் நேர்கோட்டில் இருந்து கீழே இருக்கும்.
அதனால் அப்போது அதிக அலை நீளம் கொண்ட சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள் வாயு மூலக்கூறுகளை கடப்பதற்கு நேரம் அதிகரிக்கும்.
அதனால் இந்த நிறங்கள் உறிஞ்சப்பட்டு வானத்தில் பிரதிபலிக்கின்றன.