தண்ணீர்
தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.
எப்பொழுது அருந்துவது
காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.
உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.
குளிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் படுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.
பாதிப்பு
தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.