கோபம் கொடியது
கோபத்தின் வகைகள்
1. முதலாவது அறிவைப் பாதிக்கக் கூடியது.
2.இரண்டாவது உடலைப் பாதிக்கக் கூடியது.
3.மூன்றாவது மனதைப் பாதிக்கக் கூடியது.
இந்த மூன்று வகைக் கோபங்களும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
காரணம்
1. ஒருவருக்கு பல காரணங்களால் கோபம் வருகிறது.
2. அவர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் அவமதிக்கப்பட்டால் கோபம் வருகிறது.
3. தான் விரும்பியது கிடைக்காவிட்டாலும் கோபம் வருகிறது.
உதாரணம்
1. ஒரு உயர் அதிகாரி, தன் அலுவலகத்தில், அவருக்குக் கீழ் பணிபுரிவோர், சரியாகப் பணியாற்றா விட்டாலும், அவர் சொல்வதை யாரும் கேட்காவிட்டாலும் கோபப் படுகிறார்.
2. ஒருவர் ஒருவரை யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவருக்கு கோபம் வருகிறது.
3.ஒருவர் செய்யாததை செய்ததாகவும், செய்ததை செய்யாததாகவும், மற்றொருவர் சொல்லிவிட்டால், முதலாமவருக்கு உடனே கோபம் வருகிறது.
4.வீட்டில் சிறு குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்களை திட்டி விட்டால், அந்த சிறு குழந்தைகளுக்குக் கூட கோபம் வருகிறது.
இப்படி கோபம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் காரணமாக உண்டாகும் எதிர்மறை
எண்ணங்களின் விளைவாகத்தான் கோபம் வருகிறது.
விளைவுகள்
1.கோபம் மிகவும் கொடியது.
2.இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
3.கோபம் வரும் போது இரத்த அழுத்தம் அதிகமாகும்.
4.இதயத் துடிப்பும் அதிகமாகும்.
5.அட்ரினலின் (Adrenaline) மற்றும் நோரட்ரினலின் (Noradrenaline) ஆகிய ஆபத்தான ஹார்மோன்கள் அதிகம் சுரந்து, இதய ரத்த நாளங்களைக் கடினமாக்கும்.
6.இரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாகும்.
7.இதனால் மாரடைப்பு ஏற்படும்.
8.இது தவிர, கோபம், மூளையைத் தாக்கி, பக்கவாத நோய் கூட வரும்.
9. கோபம் வரும் போது அதிகமாக வியர்க்கும்.
10.மூக்கு விடைத்துக் கொள்ளும்.
11. கைகளில் நடுக்கம் ஏற்படும்.
12. தலைவலி வரும்.
13, உடல் தசைகள் இருகும்.
14.மன அழுத்தம் மிக அதிகமாகும்.
15. கோபத்தில் ஒருவர் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடுவார்.
16.உடல்நலத்தைக் கெடுப்பதுடன், கோபம் மன நலத்தையும் பாதித்து ஒருவரை மன நோயாளியாக மாற்றி விடும்.
17.எனவே உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாக்க, கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோபத்தை கைவிடல்
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பைக் கைவிடவேண்டும்.
2. எதற்கும் அவசரமோ, பதட்டமோ கூடாது.
3.கோபத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைத் தவிர்த்திடல் வேண்டும்.
4. கோபம் வரும் போது, ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கப் பழக்கிக் கொள்ளவேண்டும்.
5. எந்த இடத்தில் கோபம் வந்ததோ, அந்தஇடத்தை விட்டு உடனே அகன்று விடவேண்டும்.
6.வேறு தனிமையான இடத்திற்குச் சென்று, மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும்.
7.கோபம் எப்படி ஏற்பட்டது, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது, அதில் தன் பங்கு என்ன என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்து, ஆராய வேண்டும்.
8. இப்படி எல்லாம் செய்தால் மீண்டும் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
9.தேவைப்பட்டால் மனநல மருத்துவரை அணுகி மருந்துகளைப் பெற்று உட்கொள்ளலாம். அல்லது உளவியல்
, ஆலோசகரை அணுகி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் நவீன பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
10. இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், கோபத்தை வெகுவாக குறைக்கலாம்.
11.உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ளலாம்.