குடும்ப விவாதங்களால் உண்டாகும் ஆபத்து
பிரிவை உண்டாக்கும்
1.கணவனும் மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
2. முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்று விடுகிறது என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.
விவாதம் குறைப்போம்
1.விவாதம் எல்லை மீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.
2. அதனால் குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக் கொள்வது.
3. நல்லது தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களை கூட பெரிதாக்கி திசை திருப்பி விடும்.
4. விவாதம் கடுமையாகும் போது கோபம் தோன்றும்.
5. அது தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு வழிவகுக்கும்.
6. அத்தகைய வார்த்தைகள் தம்பதிகளிடையே ஆறாத வடுவை உருவாக்கிவிடும்.
7. தம்பதிகளில் சிலர் விவாதத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சக்தியாக கருதுகிறார்கள்.
8. ஆனால் அது ஒரு கத்தியை போன்றது.
9. வீண் சண்டையை வளர்த்து மன வருத்தத்தை உருவாக்கிவிடும்.
காத்திருப்பு
1. இணையிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச நினைப்பவர்கள் முதலில் அதற்கான சூழ்நிலைக்காக காத்திருக்க வேண்டும்.
2. எரிச்சலான மனநிலையில் இருக்கும் போது ஆரம்பிக்கும் பேச்சு வார்த்தை பெரும்பாலும் சண்டையில்தான் முடியும்.
கேளுங்கள்
1. ஒருவர் எரிச்சலாக பேசினாலும் அவர் பேசுவதை முழுமையாக காது கொடுத்து கேளுங்கள்.
2. அப்போதுதான் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வருவார்.
3. தம்பதிகள் தங்கள் வாத திறமையை வெளிக்க காண்பிக்க கூடாது.
4. ஒருவர் கருத்தில் நியாயம் இருந்தால் அது புரிந்து கொண்டு ஆமோதிக்க வேண்டும்.
5. பேச்சுவார்த்தை சமூகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால், உடனே பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
6. பேச்சு விவாதமாகிவிட்டால் வார்த்தைகளில் மிகுந்த கவனம் காட்டுங்கள்.
7. விவாதத்தை தேவையில்லாமல் வளர விடாதீர்கள்.
அமைதி காப்பதே சிறந்தது
1. உங்கள் கருத்தையும் அதில் இருக்கும் நியாயத்தையும் உங்கள் இணை புரிந்து கொள்ளாத போது கொஞ்சம் அமைதி காப்பதே சிறந்தது.
2. உங்களுடைய கருத்து அவமதிக்கப்பட்டால், அந்த மன வருத்தத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசி விடக்கூடாது.
3. தனது கருத்து என்றாவது ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு பிரச்சனையை பக்குவமாக கையாண்டால் உங்கள் கருத்துக்கள் இணையை சிந்திக்க வைக்கும்.
4. தனக்குத்தான் எல்லாம் தெரியும் தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவ்வளவுதான் என்பது போல் ஒருபோதும் ஆணவத்துடன் நடந்து
கொள்ளாதீர்கள்.
5. தனது இணையும் விஷய ஞானம் உள்ளவர்கள் தான் என்பதை எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
புத்திசாலித்தனமல்ல
1. மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கும் மனநல நிபுணர்கள் கணவன் மனைவி இருவருமே ஒருவர் சொல்வதற்கு இன்னொருவர் ஆமாம் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமான விஷயமல்ல.
2. சிந்திக்கவே தெரியாதவர்கள் தான் அப்படி ஆமாம் போடுவார்கள்.
3. அதனால் குடும்பம் நன்றாக செயல்பட இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டியது அவசியம் என்று சொல்கிறார்கள்.
4. கணவன் மனைவி இடையே எழும் விவாதங்கள் பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில்
5. மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கிடையே அதிக விவாதம் நடப்பதில்லை.
6. பிரிந்து வாழும் தம்பதிகளில் பெரும்பாலும் பிரிவிற்கு வீண் விவாதம் தான் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.