ருசி கூட்டும் ஈசி டிப்ஸ்
####################
1.சம்பா கோதுமையில் உப்புமா செய்யும் போது கடைசியாக 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, இறக்கி வைக்கவும். உப்புமா அதிக மனமாகவும் ருசியாகவும் இருக்கும்.
2. வறுத்தப் புழுங்கள் அரிசியை அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும். கூட்டு வதக்கல் செய்யும்போது கடைசியாக லேசாக தூவி இறக்கினால் மனமாக இருக்கும்.
3. சிலர் பொரியலில் முக்கியமாக உருளைக்கிழங்கு பொரியலில் மொறுமொறுப்புக்காக கடலை மாவை சேர்ப்பார்கள். கடலை மாவை விட பொட்டுக்கடலை மாவு சேர்த்தால் சுவை கூடும்.
3. வெங்காய சாம்பார் செய்யும் போது சின்ன வெங்காயம் ஏழு எட்டு வரைக்கும் சாம்பாருக்கு அரைக்கும் பொருள்களுடன் சேர்த்து அரைத்து சாம்பாரில் கொட்டவும். சாம்பார் வாசனை வீடு முழுக்க மணக்கும்.
4. இட்லி பொடி அரைக்கும்போது சிறிதளவு கறிவேப்பிலை வறுத்து சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
5. கலந்து சாதம் வெஜிடபிள் பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க வேண்டுமா? குக்கர் மூடியை திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறை விட்டு கிளறி விடவும். சாதம் உதிரியாக வரும் ருசியும் தூக்கலாக இருக்கும்.
6.துவையல் அரைக்கும் போது மிளகாயை தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது. மிளகு ருசியும் வித்தியாசமாக இருக்கும்.
7. தக்காளி சாதம் கிளறும் போது பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்து விட்டு செய்தால் சுவையாக இருக்கும்.
8. நெய்யில் முந்திரியை வறுத்து போட்டு விட்டால் தக்காளி சாதம் பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.
9. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் மோர் குழம்பு வைக்கும் போது அறு நெல்லிக்காய்களை விதை நீக்கிவிட்டு அரைத்துப் போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
10. மோர் குழம்பு கொதித்து வரும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
11. சாம்பார்ருக்கு துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் வேக வைத்து சேர்த்தால் சாம்பார் ருசியாகவும் இருக்கும். இரவு வரை கெடாமல் இருக்கும்
12.முட்டைக்கோசின் மையத்தில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
13. இட்லிக்கு தொட்டுக்கொள்ள வைக்கும் பாசிப்பருப்பு சாம்பார் கடைசியாக மிளகு, சீரகம், வர மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கலக்கவும். சாம்பார் கூடுதல் சுவையாக இருக்கும்.
14.அரைத்து விட்டு சாம்பார் வைக்கும் போது அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
15. பருப்பு ரசத்துக்கு இரண்டு பச்சை மிளகாய் நீள வாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போடுங்கள் அதன் சுவை சூப்பராக இருக்கும்.
16. தயிர் பச்சடி சால்ட் என்று எதுவும் செய்தாலும் தேங்காய் எண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனை தூக்கலாக இருக்கும்.