எடுத்துட்டு வாங்க
################
பால் - ஏழு கப்
தண்ணீர் - மூன்று கப்
சர்க்கரை - ஒரு கப்
குங்குமப்பூ,ஏலக்காய், பிஸ்தா, பாதாம் லெமன் ஜூஸ்- சிறிதளவு
செய்யலாம் வாங்க
################
3 கப் பாலை தனியாக எடுத்துக்கொண்டு இரண்டு கப் பாலாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக்
கொள்ளவும்.
மீதமுள்ள பாலில் லெமன் ஜூஸை ஊற்றி பாலை திரித்துக் கொள்ளவும்.
திரித்த பாலை எடுத்து துணியில் வடித்து,அதனை தண்ணீரில் அலசி பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
தண்ணீர்,சர்க்கரை - ஒரு கப் சேர்த்து, அதில் உருண்டைகளை சேர்த்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
காய்ச்சி வைத்திருக்கும் பாலில் நான்கு ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து ஆற வைக்கவும்.
குக்கரில் வேகவைத்த உருண்டைகளை தண்ணீர் வடித்து பாலில் சேர்க்கவும்.
இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
ருசியில் நாவு நடனமாடும்
குஷியில் மனது மலைத்து பாேகும்