இல்லத்தரசிகளே குறியுங்கள்!


வீட்டுக் குறிப்புகள்

1. மெழுகு திரியில் முனை பந்தில் சிறிது உப்பை தடவினால் திரி வேகமாக தீர்ந்து போகாது.

2. தேன் , நெய் கெட்டியாகிவிட்டால் அந்த பாட்டிலை சூடான நீரில் வைத்து விட்டால் உருகிவிடும்.

3. பூண்டை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து விட்டால் எளிதாக உரிக்கலாம்.

4. ஊசிகள், ஊக்குகள் போட்டு வைக்கும் பெட்டியை சிறிதளவு டால்கம் பவுடரை போட்டு வைத்தால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

5. ஆணியில் சிறிதளவு மெழுகு தேய்த்து அடித்தால் மரத்தில் ஆடி வேகமாக இறங்கிவிடும்.

6. பார்சல் கட்டும் கயிறை சுடுநீரில் முக்கிவிட்டு கட்டினால் கயிறு காய்ந்ததும் நன்றாக இறுகி பலமாகிவிடும்.

7. அறைக்குள் புகை அடைந்தால் நனைந்த துண்டால் வேகமாக வீசினால் புகை விலகிவிடும்.

8. பிஸ்கட் வைத்திருக்கும் டின்னில் சர்க்கரையை ஒரு துணியில் கட்டி போட்டு வைத்தால் பிஸ்கட் நமத்துப் போகாது.

9.அரிசியை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் அதில் பூண்டு இதழ்களை போட்டு பாதுகாத்து விடலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை