அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டாம்.
மீறினால் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்
உணர்வு
அலைப்பேசி, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே பால் ஊட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைபடுகிறது.
இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்று சேராமல் போகிறது.
கவனம்
தாயின் கவனம் வேறு பக்கம் இருப்பதை குழந்தையால் உணர முடியும்.
அந்த நேரத்தில் குழந்தை பால் அருந்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கும்.
அது குழந்தையின் கவனிப்புத்திறனை பாதிக்கும் என்பதே ஸ்டீல் பேஸ் எக்ஸ்பிரிமெண்ட் என்னும் உளவியல் ஆய்வில் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேவை
தாயின் கவனம் அலைபேசி, தொலைக்காட்சியில் இருப்பதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகளுக்கு தேவையான பால் ஊட்டுதல், குழந்தைகளுக்கு வசதியான முறையில் பால் ஊட்டுதல், போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் குழந்தைக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை.
வளர்ச்சி
அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் குழந்தைகளின் டி என் ஏ உருவாக்கம், உள்ளிட்ட நுண்ணிய வளர்ச்சி விகிதங்களை அதிகம் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாலூட்டும் நேரம் மட்டுமில்லாமல் சாதாரண நேரங்களிலும் குழந்தைக்கு அருகில் அலைபேசியோ?, தொலைக்காட்சியோ? இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்மறை மாற்றங்கள்
அலைப்பேசி, தொலைக்காட்சியில் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை தாய்மார்கள் கவனிக்க தவறுவார்கள்.
இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் உங்கள் கவனத்திற்கு வராமலேயே இருக்கும்.
கவனத்துடன் பால் கொடுங்கள்!
வளரும் சமுதாயத்தை வீணாக்காதீர்கள்!