கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்
✓கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும்.
✓வாந்தி,மயக்கம் ,ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளும் இத்தகைய உடல் மாற்றங்களை கண்டு குழப்பம் பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநிலை பிரச்சனைகளும் ஏற்படும்.
✓ விரும்பிய உணவை உண்ண முடியாது.
✓அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்படும்.
வளைகாப்பு வைபவம்
✓கருவுற்ற ஏழாவது மாதத்தில் அல்லது ஒன்பதாவது மாதத்தில் உறவினர்களும் நண்பர்களும் பெண்ணின் வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள்.
✓ கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கண்ணாடி வளையல்களை அணிவித்து மகிழ்வர்.
✓ கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும்.
✓ தலைப்பிரசவம் அதிக பயத்தை ஏற்படுத்தும்.
✓ பிரசவம் நல்லபடியாக நடக்கும் என்ற, கவலையும் ,பயமும் இருக்கும்.
✓ உறவினர்களும் நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று சாெல்வதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
பல்வகை சோறும் பலகாரமும்
✓வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை, போன்ற சோறு வகைகளும், இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
✓ கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசைத்தீர சாப்பிடுவார்கள்.
வளையல்களை காப்பு
✓கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்கு கேட்க முடியும்.
✓ அந்த சத்தமே தாயையும் சேயையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
தலை பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது ஏன்?
✓ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் நம்மையும் நம் தாய் இப்படித்தானே தாங்கி இருப்பாள் என்று நினைத்து தாயின் மீது அதிகம் பாசம் கொள்வார்கள்.
✓தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள்.
✓ எனவே தான் தலைப் பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.