நகங்களை நீளமாக வளர்ப்பதை தவிர்க்கலாம். கைகளை குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் நகங்களை தூய்மையாக பராமரிக்கலாம்.
நகங்கள் பளபளப்புடன் இருக்க
மல்லிகைப் பூவின் இதழ்களை, அவ்வப்பொழுது நகங்களின் மீது தேய்த்து வந்தால் அவை பளபளப்பாகும்.
ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளவும்.
அதில் சிறிது திரவ சோப்பு அல்லது ஷாம்பு எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை சாறு 2 கரண்டி
உப்பு 1/4 கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்தக் கரைசலில் கைகளை 15 நிமிடங்கள் வரை மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.
நகங்களின் இடுக்குகளில் மென்மையான பிரஷ் கொண்டு தூய்மைப்படுத்தவும்.
இதன் மூலம் அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை நீங்கும்.
மாதம் இரண்டு முறை இதை செய்து வரலாம்.
விரல்கள் மீது விரல்கள் மீது தேங்காய் எண்ணெய் தடவி,மென்மையாக மசாஜ் செய்து வரலாம்.
தரமற்ற நகப் பூச்சுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நகை பூச்சை அகற்ற உபயோகப்படுத்தும் திரவத்தில் சிறிதளவு கிளிசரின் கலந்து பயன்படுத்தலாம்.
கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
இதற்கு இயற்கையான முறையில் வீட்டிலேயே கிரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
சியா வெண்ணெய் 3 கரண்டி
கற்றாழை ஜெல் 3 கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் 2 கரண்டி
பாதாம் எண்ணெய் 2 கரண்டி
மரவள்ளிக்கிழங்கு தூள் 3 கரண்டி
விருப்பமான நறுமண எண்ணெய் 1 கரண்டி
செய்முறை
சியா வெண்ணையை கண்ணாடி பாத்திரத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெய்களை ஒவ்வொன்றாக ஊற்றி கலக்கவும்.
சிறிது நேரத்தில் அந்தக் கலவை கிரீம் பதத்திற்கு வரும்.
கடைசியாக கற்றாழை ஜெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு தூளை சேர்த்து கலக்கவும்.
காற்று புகாத கண்ணாடி ஜாடியில் இந்த கிரீமினை சேமித்து உபயோகிக்கலாம்.
இதை கைகளுக்கும்,நகங்களுக்கும் பூசலாம்.
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
இதை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல், அறையின் வெப்பநிலையிலே வைத்து பயன்படுத்தலாம்.