இதுல மருத்துவமா.....?

இதுல மருத்துவ குணமா....?

அறுசுவைகளில் ஒன்றான புளிப்பு சுவை நிறைந்தது புளி.

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

 புளி புற்றுநோய் செல்களை தடுக்கும்.
 வலி வீக்கத்தையும் குறைக்கும்.

புளிய மரத்தின் இலை, வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.

தளிர் ,இலை உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

புளியம்பூ குளிர்ச்சி தரும்.

புளியங்காய் பித்தம் தணிக்கும்.

புளியம்பழம் குடல் வாயு அகற்றும்.

 குளிர்ச்சி தரும் மலமிளக்கியாக செயல்படும்.

புளி மர பட்டை சதை, நரம்புகளை சுருங்கச் செய்யும்.

இதன் துளிர் இலைகளை துவையல் தயார் செய்து சாப்பிட்டால் பித்தம் சமமாகி வயிற்று மந்தம் நீங்கும்.

ஆமணக்கு நெய் தடவி புளி இலைன் ஒட்ட வைத்து ,இரண்டு மணி நேரம் கழித்து சூடான நீரைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யும் போது கை, கால் வீக்கம், மூட்டு வலி ,கை கால், தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள சுளுக்கு நீக்கும்.

30 மில்லி புளிய இலைச்சாற்றை காய்ச்சி கொதிக்க வைத்து பால் கலந்து சாப்பிட்டால் இரத்த பேதி, சீத பேதி நிற்கும்.

புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்று போட்டால் கண் வலி, கண் சிவப்பு குறையும்.

புளியம்பழம் மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணியை சம அளவு எடுத்து அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி காலை மாலை என 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை இறக்கம் குணமாகும்.
உப்பு மற்றும் புளியை சம அளவு எடுத்து அரைத்து, உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கில் சதை வளர்வது தடைபடும்.

புளியங்கொட்டையில் தோல், மாதுளம் பழத்தோல் இரண்டையும் சம அளவு கலந்து சூரணம் செய்து சுண்டக்காய் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வேதி வாந்தி வாயு தீரும் நிற்கும்.

புளியங்கொட்டை தோல், கருவேலம்பட்டை தூள், சம அளவு கலந்து உப்பு பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல் ஆடுதல், சீல் வடிதல், ரத்தக் கசிவு, ஈறு வீக்கம் ஆகியவை சரியாகும்.

புளியம்பட்டை தூளும், உப்பும் கலந்து வெண்ணிறமாகும் வரை வறுத்து அரைத்த பொடியை 100 மில்லி கிராம் எடுத்து சீராக தண்ணீரில் கலந்து காலை ,மாலை குடித்து வந்தால் செரிமான கோளாறு, வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

1 கருத்துகள்

புதியது பழையவை