மூலப்பொருட்கள்
இலைகள்,பூக்கள்,காய்கறிகள், பழங்களின் தோல்கள், மண்ணுக்கடியில் கிடைக்கும் தாதுக்கள், போன்றவற்றிலிருந்து பெறப்படும் சாயங்களை இயற்கை சாயங்கள் என்கிறோம்.
நிறங்கள்
*கடுக்காயை பதப்படுத்தி ஒரு விதமான மஞ்சள் நிறம் உருவாக்கப்படுகிறது.
*இண்டிகோ என்னும் செடியில் இருந்து நீல நிற சாயம் பெறப்படுகின்றது.
* வெல்லத்தையும், இரும்பு துகள்களையும் நொதிக்க வைத்து கருப்பு நிறம் சாயம் தயாரிக்கப்படுகிறது.
பராமரிப்பு
*இயற்கை சாயங்களால் வண்ணம் ஏற்றப்பட்ட சேலைகளை பராமரிப்பது சற்று கடினமான செயல்தான்.
* துவைப்பது,இஸ்திரி செய்வது, அலமாரியில் வைத்து பாதுகாப்பது எல்லா அனைத்திலும் கவனம் தேவை.
*சரியான முறையில் பராமரித்தாலே இத்தகைய சேலைகள் பல வருடங்கள் இருக்கும்.
* சூரிய ஒளிபடும் இடத்தில் சேலைகளை வைப்பது நிறத்தை மங்கச் செய்யும்.
*இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகளை நேரடியாக சூரிய ஒளியில் காய போடக்கூடாது.
*இயற்கை சாயம் ஏற்றப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள்பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது வெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.
* இயற்கையான சோப்புகள் உள்ளது.
* கூந்தலுக்கு பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு உபயோகித்து இந்த துணிகளை துவைக்கலாம்.
* செலவு செய்ய தூய நீரை பயன்படுத்துவது நல்லது.
*உப்பு நீர் இந்த வகை துணிகளுக்கு ஏற்றது அல்ல.
*இயற்கை சாயம் பூசப்பட்ட புடவைகளை மிதமான வெப்ப நிலையில் மட்டுமே இஸ்திரி செய்ய வேண்டும்.
*உள்பக்கமாக திருப்பி போட்டு இஸ்திரீ செய்ய வேண்டும்.