சேலையில் இயற்கையா......?


இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சேலைகள்


 மூலப்பொருட்கள்

 இலைகள்,பூக்கள்,காய்கறிகள், பழங்களின் தோல்கள், மண்ணுக்கடியில் கிடைக்கும் தாதுக்கள்,  போன்றவற்றிலிருந்து பெறப்படும் சாயங்களை இயற்கை சாயங்கள் என்கிறோம்.


நிறங்கள்
*கடுக்காயை பதப்படுத்தி ஒரு விதமான மஞ்சள் நிறம் உருவாக்கப்படுகிறது.

*இண்டிகோ என்னும் செடியில் இருந்து நீல நிற சாயம் பெறப்படுகின்றது.

* வெல்லத்தையும், இரும்பு துகள்களையும் நொதிக்க வைத்து கருப்பு நிறம் சாயம் தயாரிக்கப்படுகிறது.


பராமரிப்பு

 *இயற்கை சாயங்களால் வண்ணம் ஏற்றப்பட்ட சேலைகளை பராமரிப்பது சற்று கடினமான செயல்தான்.

* துவைப்பது,இஸ்திரி செய்வது, அலமாரியில் வைத்து பாதுகாப்பது எல்லா அனைத்திலும் கவனம் தேவை.

 *சரியான முறையில் பராமரித்தாலே இத்தகைய சேலைகள் பல வருடங்கள் இருக்கும்.
* சூரிய ஒளிபடும் இடத்தில் சேலைகளை வைப்பது நிறத்தை மங்கச் செய்யும்.

*இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகளை நேரடியாக சூரிய ஒளியில் காய போடக்கூடாது.

*இயற்கை சாயம் ஏற்றப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள்பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது வெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.

* இயற்கையான சோப்புகள் உள்ளது.

* கூந்தலுக்கு பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு உபயோகித்து இந்த துணிகளை துவைக்கலாம்.

* செலவு செய்ய தூய நீரை பயன்படுத்துவது நல்லது.

 *உப்பு நீர் இந்த வகை துணிகளுக்கு ஏற்றது அல்ல.

*இயற்கை சாயம் பூசப்பட்ட புடவைகளை மிதமான வெப்ப நிலையில் மட்டுமே இஸ்திரி செய்ய வேண்டும்.

*உள்பக்கமாக திருப்பி போட்டு இஸ்திரீ செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை