பெண்களின் சிறுநீர் வழி மிகவும் சிறியதாக இருப்பதால் நுண்ணுயிரிகள் சிறுநீர் பாதைக்குள் மிக எளிமையாக சென்று விடும் . இதனாலே சிறுநீர் தொற்று பெண்களை மிக எளிதாக தாக்குகிறது .
ஈ - காேலை என்னும் பாக்டீரியாதான் சிறுநீர் தொற்றை ஏற்படுத்துகிறது.
யாருக்கெல்லாம் ஏற்படும்
*புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .
*நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம் .
*நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .
*சுகாதாரம் இல்லாத பொது கழிப்பிடத்தை பயன்படுத்தும் போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம் .
எப்படி தவிர்ப்பது
*நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் .
*பிறப்பிலேயே சிறுநீர் பிரச்சனைகள் , சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் இந்தத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது .
* மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதாலும் ,சிறுநீர் வழியில் பாதிப்பு ஏற்பட்டு தொற்று ஏற்படலாம் .
அறிகுறிகள்
✓சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அதிகமாக இருக்கும் .
✓ சூடாக சிறுநீர் செல்லும் .
✓ சிறுநீர் குறைவாக அடிக்கடி கழிப்பது.
✓ பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும் .
✓காய்ச்சல் குளிர் ஏற்படும்
✓சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வரலாம்
எப்படி உறுதி செய்வது
✓சிறுநீர் பரிசோதனை யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம்
✓ கர்ப்பிணி பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறப்பு குறை பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
செய்ய வேண்டியவை
✓தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
✓ சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
✓பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால் சுகாதாரத்தில் கவனம் தேவை
✓நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது
வருமுன் காப்பதே
உடலுக்கு நலமே......
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரரே!!🙏🙏
பதிலளிநீக்கு