தனித்திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்வது எப்படி


நம்மிடம் என்ன திறமை இருக்கிறது ? என்னும் கேள்வி நமக்குள் அடிக்கடி எழும் . நமக்குள் இருக்கும் திறமைகளை நாம் முதலில் அறிந்து கொண்டால் மட்டுமே நம்மால் சாதிக்க முடியும் . அதுபோலவே ஒவ்வொருவரும் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது.

இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது . அத்தகைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள்:

 கடந்த கால வெற்றிகள் நமது சிறப்பை , திறமையை , தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் . எனவே திறமைகளைத் தெரிந்து கொள்வதற்கு நாம் கடந்து வந்த பாதையை கவனித்து மேம்படுத்துவது அவசியம் . நம்முடைய பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொண்டால் திறமைகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் தடைகளை தகர்த்தெறிய முடியும் . நமது திறமைகளை , நம்மீது அக்கறை கொண்டவர்களும் அதிகம் கவனித்து இருப்பார்கள் .கிடைக்கும் சிறு வாய்ப்புகளிலும் நம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் . எப்பொழுதும் பாதுகாப்பான வளையத்திற்கு உள்ளே இருக்கும்போது , நம்மைச் சுற்றி உள்ள வாய்ப்புகளை அறியாமல் இருந்து விடுகிறோம் . நமக்கான ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளாமல் வெளி உலகத்தை பார்க்கும் பொழுது அதில் வாய்ப்புகளும் , நமக்குள் இருக்கும் திறமைகளும் வெளிப்படும் .
நம்பிக்கையே சாதாரண மனிதனை வெற்றியாளனாக மாற்றுகிறது . எனவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும் , முக்கியமான தனித்திறமைகளை கண்டறிவதற்கு நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வதும் அவசியம் . அப்பொழுதுதான் நம்மால் எதை செய்ய முடியும் ? எதை செய்ய முடியாது? என்பதை தெரிந்து கொள்ள முடியும். நமக்கு மிகவும் பிடித்த துறையில் தனித்துவம் பெற அந்தத் துறை தொடர்பான திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் .மேம்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் செயல்களில் எதில் மனம் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நம்முடைய தனித்திறமையை எளிதாக அறிந்து கொள்ள முடியும் .

புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு எப்போதும் தயங்க கூடாது .அதை சவால்கள் நிறைந்த இந்த உலகில் நாம் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் . செய்த தவறுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ,அவற்றை சரி செய்வதற்கான வழிகள் என்னவென்று கண்காணிக்க வேண்டும் . தவறுகளை சரி செய்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

திறமை இல்லாதவன் இல்லை
பயன்படுத்திக் கொண்டவன் கெட்டிக்காரன்
பயன்படுத்தாமல் விட்டவன் வெட்டிக்காரன்
நாம் கெட்டிக்காரனா வெட்டிக்காரனா

2 கருத்துகள்

  1. நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு கருத்தும் தலைசிறந்து. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை