ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத் தோட்டத்தை எப்படி பாதுகாப்பது

காற்று மாசுபாடு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் .

வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரில் கூட பெருமளவு வேதிப்பொருட்கள் கலந்து உள்ளது .

புகை மற்றும் தீங்கு செய்யும் ரசாயன பொருட்கள் காற்றையும் ,நீரையும் மாசுபடுத்துகின்றன .

வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளை காற்று மாசுபடுதல் மற்றும் ரசாயன பொருட்கள் கலந்த நீரில் இருந்து பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் .

வீட்டுத் தோட்டத்தில் துளசி ,தூதுவளை, நிலவேம்பு ,ஆடாதோடா, புதினா , நொச்சி ,வெந்தயம் ,வல்லாரைக் கீரை , வேம்பு ,ஓமவல்லி போன்ற தாவரங்களை வளர்க்கலாம் .

இவற்றுக்கு காற்றிலுள்ள நச்சுக்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு .
சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம் அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும் .

இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம் .

இயற்கை உரங்கலான பசுவின் சாணம், ஆட்டுப்புழுக்கை , பசுந்தாள் உரம்  சமையலறையில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை உறவாக போடுவதன் மூலம் இயற்கை முறையில் செடிகள் செழித்து வளர்ந்து நல்ல பயனை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

கருத்துரையிடுக

புதியது பழையவை