பண்டிகை காலத்தில் செலவில் சிக்கனம்


பண்டிகை காலங்களில் சற்று கவனமாக திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்வதே அனைவருக்கும் நன்மை அளிக்கும் .

குடும்ப நபர்களில் யாருக்கு எவ்விதமான ஆடைகள் தேர்வு செய்கிறோம் என்பதை பட்ஜெட் கேற்ற முன் திட்டம் தேவை .

தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை அறிந்த பின்னர் வாங்குவது நல்லது .

வாங்குவதாக முடிவு எடுத்துள்ள பொருட்களின் விலை ,தரம் பற்றி ஒன்றுக்கு இரண்டு கடைகளில் விசாரித்து அறிந்து கொள்வதும் முக்கியம் .

பண்டிகை காலங்களில் பலகாரம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை வீடுகளில் தயார் செய்வதும் ஒருவித சிக்கன நடவடிக்கையே .

எந்த ஒரு பொருளையும் தேவைக்கேற்பவே வாங்க வேண்டும் . விருப்பப்படி பொருட்களை வாங்கி குவிப்பது என்பது செலவுகளை அதிகப்படும் வைக்கும் பழக்கமாகும் .

பொருட்களை கிரெடிட் கார்டை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலம் தவணை முறைகளிலோ வாங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது .

கேஷ் பேக் சலுகை , முதல் மாத தவணை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் .

எளிதாக கிடைக்கும் கடன் திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றால் கவரப்பட்டு அவசர முடிவுகளை எடுப்பதுதான் பலரை நீண்ட நாளுக்கு கடனாளியாக ஆக்கி விடுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும் .

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கிடைக்கும் போனஸ் உள்ளிட்ட ஊக்கத்தொகை முழுவதுமே செலவு செய்வதற்கே என்று நினைப்பது தவறு .

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போனஸ் தொகையில் ஒரு பகுதியை சேமிப்பது நல்ல பழக்கமாகும் .

1 கருத்துகள்

புதியது பழையவை